போலியான ஆவணங்களை தயாரித்து சாரதி அனுமதிப்பத்திரம் மற்றும் வாகனப் பதிவுப் புத்தகங்களை போலியாக தயாரித்த வேரஹெர பிரதேசத்தில் பாடசாலை ஒன்றை நடத்தும் ஒருவர் உட்பட மூவரை பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மனம்பிடிய, வேரஹெர மற்றும் நாரஹேன்பிட்ட பிரதேசங்களைச் சேர்ந்த 39 மற்றும் 60 வயதுடைய மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 22 போலி ஓட்டுநர் உரிம அட்டைகள், 6 கையடக்கத் தொலைபேசிகள், கணினி மற்றும் பல ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.