“மக்களுக்கு சரியான முறையில் சேவை வழங்காத அரச உத்தியோகத்தர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்கு நாம் பின் நிற்கப்போவதில்லை என மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மன்னார் பிரதேச செயலகத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்ற பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர்,
“அரச உத்தியோகத்தர்கள் மக்களுடன் அன்பாக நடந்து கொண்ட அவர்களுக்கு உரிய நேரத்தில் சிறப்பான முறையில் சேவையை வழங்க வேண்டும்.
இந்த நாட்டை கட்டி எழுப்புவதற்காக மக்கள் எங்களுக்கு ஒரு ஆணையை வழங்கி இருக்கிறார்கள். அதனை சரியான முறையில் முன்னெடுத்து மக்களின் பிரச்சினைகளை விரைவில் தீர்க்க நாம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மன்னாரில் இடம்பெற்ற நில மோசடி தொடர்பில் எல்லாவற்றையும் நாம் அறிந்திருக்கிறோம் சம்பந்தப்பட்டவர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
கடந்த 15 வருடங்களுக்கு மேற்பட்ட பிரச்சினைகளை ஒரே நாளில் தீர்த்து விட முடியாது. பாராளுமன்ற உறுப்பினர்களின் ஒத்துழைப்போடு அதனை எமது அரசாங்கம் தீர்த்து வைக்கும்.
சிங்கள தமிழ் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை கொண்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் இங்கு இருக்கிறார்கள். அதனை விட நாட்டின் பிரச்சினைகளை சுலபமாகத் தீர்த்து வைப்பதற்கு மக்களின் ஒத்துழைப்பும் எமக்கு தேவை.” என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.