நேற்று இரவு ஹொரணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பர பகுதியில் தடி ஒன்றால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
கொலை செய்யப்பட்டவர் 63 வயதுடைய தம்பர, மீவனபலான பகுதியைச் சேர்ந்தவராவார்.
இவர் தனது வீட்டில் நபரொருவருடன் இணைந்து மது அருந்திக் கொண்டிருந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததால், சந்தேகநபர் அவரது தலையில் தடி ஒன்றால் தாக்கியதில் இந்தக் கொலை இடம்பெற்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
சந்தேகநபர், கொல்லப்பட்டவரின் உறவினர் ஒருவரின் மகன் என்பதும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
ஹொரணை பொலிஸார், இச்சம்பவம் தொடர்பாக 43 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.