முல்லைத்தீவு- கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வு நேற்றையதினம் முன்னெடுக்கப்பட்ட நிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மற்றும் விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடயப் பொருட்களாக எடுக்கப்பட்டதாக முல்லைத்தீவு சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி தெரிவித்துள்ளார்.
இந்தப் புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிட வேண்டியுள்ளது.
இதுவரை 9 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இந்த அகழ்வாய்வுக்கென 57 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீடு கிடைக்கப்பெற்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி புதைகுழிக்குரிய தகரப் பந்தல், தங்குமிட வசதி, மலசலகூட வசதி உள்ளிட்ட விடயங்கள் அமைத்துள்ளோம்.
தொடர்ந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதிவான் உத்தரவிடுவாரெனில் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்.
எடுக்கப்பட்ட தகட்டிலக்கம் தொடர்பாக, அவை எந்தக் காலத்துக்குரியவை போன்ற விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அதன்பின்னர் தகட்டிலக்கங்கள் தொடர்பான விபரங்கள் அறியத்தரப்படும்." என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.