தலைமன்னார் கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச் சாட்டில் இராமேஸ்வரம் மீனவர்கள் 25 பேரை மூன்று படகுகளுடன் இலங்கைக் கடற்படை நேற்றுக் கைது செய்துள்ளது. முன்னதாக நெடுந்தீவு மற்றும் தலைமன்னார் கடற்பரப்புகளில் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்ட 27 மீனவர்கள் விடுதலை செய்ய வலியுறுத்தி கடந்த 12 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று சனிக்கிழமை வேலை நிறுத்தத்தை தற்காலிகமாக முடிவுக்குக்கொண்டு வந்து மீன்பிடிக்கச் சென்ற நிலையில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இராமேஸ்வரத்தைச் சேர்ந்த மூன்று படகையும் அதிலிருந்து 25 மீனவர்களையும் கைது செய்து தலைமன்னார் கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.