மன்னார் நீதிமன்றத்திற்கு முன் கடந்த மாதம் 16 ஆம் திகதி நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கைது செய்யப்பட்ட 7 பேரையும் மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.
கைதானவர்கள் நேற்று மன்னார் நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அவர்களை எதிர்வரும் 24 ஆம் திகதி வரை மீள விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளதுடன்
இந்த கொலை சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் பொலிஸ் புலனாய்வுத்துறையினர் முன்னெடுத்து வருவதாக மன்றில் தெரிவிக்கப்பட்டது.
மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக கடந்த 16 ஆம் திகதி வழக்கு விசாரணை ஒன்றிற்காகப் பிரவேசித்தவர்களை இலக்கு வைத்துத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் உயிரிழந்ததோடு பெண் ஒருவர் உள்ளடங்கலாக 2 பேர் படுகாயமடைந்துள்ளனர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.