(செல்வன்)
வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை மருதோடை பதியில் அமர்ந்து மக்களுக்கு அருள் பாலிக்கும் மருதோடை கந்தசாமி கோவில் போரிற்கு பின்னர் தற்போது புனராவர்த்தனம் செய்யப்பட்டு குடமுழுக்கு நடைபெற உள்ளதோடு குடமுழுக்கின் எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு (08.06.2024) இன்று சிறப்புற நடைபெற்றுள்ளது.
நீண்ட வரலாற்றுத் தொண்மை கொண்ட கோவிலாகவும் கதிர்காமம் பாதயாத்திரை செல்லும் முருக பக்தர்கள் தங்கி இளைப்பாறி செல்லும் முருக தலமாகவும் காணப்படுவதுடன் பல புதுமைகள் நிகழ்த்தும் அற்புதம் நிறைந்த கோவில் சிறப்பான முறையில் புனரமைக்கப்பட்டு குடமுழுக்கு நடைபெறவுள்ளது
07.06.2024 அன்று கர்மாரம்ப கிரியைகள் இடம்பெற்று 08.06.2024 அன்று எண்ணைய்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற்று 09.06.2024 அன்று குடமுழுக்கு நடைபெறவுள்ளது தொடர்ந்து 15 நாட்கள் மண்டலாபிசேகம் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.(ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.