முல்லைத்தீவு, மல்லாவியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த குடும்பஸ்தர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் அனிச்சங்குளம், மல்லாவியைச் சேர்ந்த 28 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஆவார்.
கடந்த 23ஆம் திகதி இரவு துவிச்சக்கர வண்டியில் குறித்த நபர் சென்று கொண்டிருந்த போது எதிர்த் திசையில் வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானார்.
இதனையடுத்து அவர் மல்லாவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கிளிநொச்சி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பில் யாழ். போதனா மருத்துவமனை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மால்லாவிப் பொலிஸார் நெறிப்படுத்தினர்.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.