பெண்களின் உலகக் கிண்ணத் கிரிக்கெட் தொடரானது நேற்று செவ்வாய்க்கிழமை 14ஆம் திகதி கொழும்பு ஆர் பிரேமதாஸ மைதானத்தில் நடைபெற்றது. நியூசிலாந்துடனான இலங்கையின் போட்டியானது மழையால் முடிவேதும் பெறப்படவில்லை.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை, நிலக்ஷிகா சில்வாவின் ஆட்டமிழக்காத அதிரடியான 55 (28), அணித்தலைவி சாமரி அத்தப்பத்துவின் 53 (72), ஹசினி பெரேராவின் 44 (61), விஷ்மி குணரத்னவின் 42 (83), ஹர்ஷித சமரவிக்கிரமவின் 26 (31) ஓட்டங்களோடு 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 258 ஓட்டங்களைப் பெற்றிருந்ததுடன் மழை குறுக்கிட்டிருந்தது. சோபி டெவின் 3, பிறீ இல்லிங் 2, றோஸ்மேரி மைர் ஒரு விக்கெட்டைக்யும் கைப்பற்றியிருந்தனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.