முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்குவாறி பகுதியில் உள்ள வீடொன்றில் பாதுகாப்பற்ற முறையில் வைக்கப்பட்டிருந்த மாத்திரைகளை தவறுதலாக உட்கொண்டதில் ஒன்றரை வயதுடைய ஆண் குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் தெரியவருவதாவது;
குறித்த குழந்தை வீட்டில் இருந்த பாட்டியின் மாத்திரைகளை யாரும் கவனிக்காத வேளை உட்கொண்டுள்ளதாகவும் நேற்றிரவு திடீரென குழந்தைக்கு சுகயீனம் ஏற்பட்டதைத் தொடர்ந்து மாங்குளம் மருத்துவமனையில்சேர்க்கபட்டு மேலதிக சிகிச்சைக்காக கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் அக்குழுந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.