கச்சதீவுப் புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழா மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் இடம்பெறும் என்று யாழ்ப்பாணம் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை ப.யோ.ஜெபரட்ணம் அடிகளார் தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் உள்ளதாவது:
2025ஆம் ஆண்டுக்கான கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்தத் திருவிழாவை இம்முறை மார்ச் மாதம் 14ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் நடத்துவதெனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்.மாவட்டப் பதில் செயலாளரின் ஒருங்கிணைப்பில் யாழ்ப்பாண ஆயர் இல்லம், இலங்கைக் கடற்படை, நெடுந்தீவுப் பிரதேச செயலகம் மற்றும் சம்பந்தப்பட்ட சகல திணைக்களங்களினது முழுமையான ஒத்துழைப்புடன் இந்தத் திருவிழாவை மேற்கொள்ள நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன – என்றுள்ளது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.