ஆதவன்.
உறவுகளை நினைவுகூருகின்றோம் என்ற போர்வையில் மாவீரர்தின நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்த அனுமதிக்கமுடியாது. அதனை நீங்களும் (சில தமிழ் எம். பி.க்கள்) ஊக்குவிக்கவேண்டாம். அவ்வாறான நிகழ்வுகளை நடத்தினால் பொலிஸார் நிச்சயம் கைது செய்வார்கள். இதனைத் தடுக்கமுடியாது - இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற உறுப்பினர் சாணக்கியனால் நாடாளுமன்றத்தில் நேற்று முன்வைக் கப்பட்ட சபை ஒத்திவைப்புவேளை பிரே ரணைமீதான விவாதத்துக்குப் பதில ளித்து உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
தமது குடும்பத்தில் உயிரிழந்த ஒருவரை அவரது குடும்ப உறுப்பினர்கள் நினை வுகூர உரிமையுண்டு. நானும் எனது தந்தையின் கல்லறைக்குச் செல்வேன். ஆனால், வேறு ஒரு நபரின் பிறந்தநாளன்று தந்தையினதோ அல்லது தம்பியினதோ கல்லறைக்குச்செல்வதில்லை. எனது கட்சிக் கொடியை எடுத்துக்கொண்டு கல்லறைக்குச் செல்வதும் இல்லை. பிரபாகரனின் பிறந்தநாளுக்கு கொடியுடன் செல்வது குடும்ப உறுப்பினரை நினைவு கூர அல்லவே...? இது பயங்கரவாதத்து டன் தொடர்புபடவில்லை. பயங்கரவாத கருத்தியலுடன் சம்பந்தப்படவில்லை எனக் கூறமுடியாது.
பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நாம் தவறாகப் பயன்படுத்தவில்லை. கைதானவர்கள் 48 மணிநேரத்துக்குள் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர். நீதிமன்றம் ஊடாகவே விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இப்படியான நிகழ்வுகளை நடத்துவதால்தான் பிரச்சினை. அவ்வாறான நிகழ்வுகளை நடத்தவேண்டாம் எனச் சொல்லுங்கள். அவ்வாறு நடத்தினால் பொலிஸார் கைது செய்வார்கள். அதனை நிறுத்த முடியாது. சட்டம் செயற்படுத்தப்படும்' - என்றார்.
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதிலளித்துக்கொண்டிருக்கையில், அவருக்கும் சாணக்கியன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கிடையில் கடும் சொற்போர் மூண்டது. கஜேந்திரகுமார் எம்.பி. இடையில் சபையில் இருந்து சென்றுவிட்டார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.