ஆதவன்
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில் மாவீரர் நாளைக் கடைப்பிடித்த மாணவர்களுக்கு எதிராகவும், அந்த நிகழ்வுக்கு அனுமதி வழங்கிய பீடாதிபதிக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்குமாறு, பொலிஸ்மா அதிபர் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக் குழுவின் தலைவர் உட்படப் பலருக்கு கடிதம் அனுப்பிவைக்கப்பட் டுள்ளது.
பொறியியல் பீடத்தின் சிங்கள தமிழ் மாணவர் ஒன்றியம் எனக் குறிப்பிட்டு இந்தக் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அந்தக் கடிதத்தில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி வளாகத்தில், வரலாற்றில் முதன்முறையாக. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்குபற்றிய மாணவர்களை அடையாளம் கண்டு நடவடிக்கை எடுப்பதற்காக அதில் பங்கேற்றவர்களின் ஒளிப்படங்களையும் இத்துடன் அனுப்பி வைத்துள்ளோம். இது விவசாய பீடத்தின் பீடாதிபதி வசந்தரூபா மற்றும் மூன்று பீடங்களின் பங்கேற்புடன் வளாகத் தின் அந்தந்த நிர்வாகத்தின் அனுமதியுடன் விவசாய பீட கேட்போர் கூடத்துக்கு முன்பாகக் கடைப்பிடிக்கப்பட்டது. பீடாதிபதிகள் சாதாரண நிகழ்வுக்கு அனுமதி மறுக்கின்றனர். ஆனால், இலங்கையின் சட்டத்தை மீறிய பயங்கரவாத அமைப்பின் நிகழ்வுக்கு அவர்கள் அனுமதி வழங்கியுள்ளனர்.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் பிரதான பீடத்தில், பயங்கர வாதத்தை இளம் சந்ததியிடையே ஊக்குவிக்கும் வகையில், அங்குள்ள நிர்வாகத்தின் முதுகெலும்பு அற்ற செயற்றிறன் காரணமாக மாவீரர் நாள் கடைப்பிடிக்கப்படுகின்றது. கிளிநொச்சி வளாகத்தில் இதனை அனுமதிப்பதானது எதிர்காலத்தில் பல்கலைக்கழக சமூகத்துக்குள்ளும் மாணவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.
கிளிநொச்சி வளாகமும் பீடமும் இது வரை இனவெறி இல்லாத அமைதியின் அடையாளமாக இருந்து வருகின்றது. இந்த நிலையில் மாவீரர்நாளைக் கடைப்பிடித்த மாணவர்களுக்கு எதிராக சிறிலங்கா பொலிஸ் ஊடாக நடவடிக்கை. எடுக்கப்படவேண்டும். பீடாதிபதிகள் இதற்குப் பொறுப்பு என்ற அடிப்படையில் அவர்கள் பதவி விலக்கப்பட வேண்டும் - என்று குறிப்பிடப்பட்டுள்ளது. [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.