மின்சாரக் கட்டண திருத்தம் தொடர்பில் பெறப்பட்ட மக்களின் கருத்துக்களை ஆராயும் பணிகள் இன்றைய தினம் நிறைவடையவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL)தெரிவித்துள்ளது.
மின்கட்டண திருத்தம் தொடர்பாக, ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கி, 2024 டிசம்பர் 17 ஆம் திகதி, பொதுமக்கள் கருத்து கேட்பு ஆரம்பிக்கப்பட்டு, கடந்த 10 ஆம் திகதி அது முடிவடைந்தது.
அந்த அமர்வுகளில் சுமார் 400 பேர் முன்மொழிவுகளை சமர்ப்பித்ததாக PUCSL குறிப்பிட்டுள்ளது.
பொது மக்கள் முன்வைத்த ஆலோசனைகளை கருத்திற்கொண்டு சுமார் 20 வீதத்தினால் மின் கட்டணம் குறைக்கப்பட வேண்டுமெனவும்
அந்த முன்மொழிவுகள் அனைத்தையும் ஆய்வு செய்து, மின் கட்டணத்தில் திருத்தம் செய்ய வேண்டுமா? இல்லையா? அல்லது விகித திருத்தம் இருந்தால், எத்தனை சதவீதம்? பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை நாளை (17) வெளியிடப்பட உள்ளதாக (PUCSL) மேலும் தெரிவித்துள்ளது.[ஒ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.