சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல்.முஹம்மது ஹனீபா தலைமையில் சம்மாந்துறை பிரதேச சபை கேட்போர் கூடத்தில் மீட்பு நடவடிக்கை மற்றும் உயிர் காற்றல் தொடர்பான அடிப்படை கற்கை நெறி தொடர்பான தெளிவுட்டல் (14) இன்று நடைபெற்றது.
பயிற்சி நெறியில் பங்கு பற்றும் மாணவர்களுக்கு மேலங்கி வழங்கி வைக்கப்பட்டதுன், மேற்படி பயிற்சி நெறி தொடர்பான தெளிவுட்டல் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ்னால் வழங்கப்பட்டது.
இந்நிகழ்விற்கு, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம, சம்மாந்துறை பிரதேச செயலாளர் தேசபந்து எஸ்.எல். ஹனீபா, அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரதி பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ், கல்முனை சுகாதார அனர்த்த முகாமைத்துவ இணைப்பாளர் டாக்டர் அஜ்வத், காரைதீவு, சம்மாந்துறை பிரதேச சபை செயலாளர்கள், இராணுவம் மற்றும் கடற்படை உயர் அதிகாரிகள், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி, அல் உஸ்வா இஸ்லாமிக் அமைப்பின் தலைவரும் அல் உஸ்வா மகளிர் அரபுக் கல்லூரியின் செயலாளர் ஐ.எல்.எம். முஸ்தபா என பலரும் கலந்து கொண்டனர். (ப)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.