வட கொரியா மீண்டும் ஓா் ஏவுகணை பரிசோதனையை நடத்தியுள்ளது.
இது குறித்துத் தென் கொரிய முப்படைகளின் தலைமையகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், பெலஸ்டிக் வகையைச் சோ்ந்த குறித்த ஏவுகணை 1,100 கி.மீ. தொலைவில் கொரிய தீபகற்பத்துக்கும் ஜப்பானுக்கும் இடையிலான கடற்பகுதியில் விழுந்ததாக குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் தங்களின் பிரத்தியோகப் பொருளாதார வலயத்திற்கு அருகே அந்த ஏவுகணை விழுந்தாலும், அதனால் தங்களின் கப்பல்களுக்கோ, விமானங்களுக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை என்று ஜப்பான் பாதுகாப்புத் துறை அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சா் பிளிங்கனின் தென் கொரிய விஜயத்தை கண்டித்து இந்த ஏவுகணைப் பரிசோதனை நடத்தப்பட்டிருக்கலாமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.