முறிகண்டி செல்வபுரம் பகுதியில் நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் நபரொருவர் பலியானதுடன் இன்னொரு நபர் படுகாயமடைந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட செல்புரம் பகுதியில் A9 வீதியில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய 3பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளதுடன், அவரது மகன் படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கிளிநொச்சியிலிருந்து வீடு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் மீது அதே திசையில் பயணித்த பாரஊர்தி மோதி இவ் விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பார ஊர்தியின் சாரதி தப்பி சென்றுள்ள நிலையில் அவரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டுவௌகின்றனர்.
இந்த நிலையில் பொலிஸாருக்கும், பொதுமக்களிற்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டமையால் குறித்த பகுதியில் பொலிஸாரும், இராணுவத்தினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டமை குறிப்பிடதக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.