முல்லைத்தீவு மாவட்டத்தில் சிறுமியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
உடல்நிலை பாதிப்படைந்த 15 வயதேயான சிறுமியொருவர் முல்லைத்தீவு மருத்துவமனைக்கு நேற்றுச் சிகிச்சைக்காகச் சென்றுள்ளார். இதன்போதே, அந்தச் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை தெரியவந்தது. அது தொடர்பில் மருத்துவமனை வட்டாரத்தால் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.