முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மந்துவில் பகுதியில் தோட்டக்காணியில் வெங்கணாந்தி பாம்பு ஒன்று நேற்றையதினம் பிற்பகல் பிடிக்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அப்பகுதியில் உள்ள தோட்டக்காணியை அதன் உரிமையாளர் துப்பரவு செய்து கொண்டிருந்தபோது, பாம்பு எதனையோ விழுங்கிய நிலையில் அசைய முடியாது கிடந்துள்ளது.
இதனை அவதானித்த உரிமையாளர் உடனடியாக முல்லைத்தீவு வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தகவல் வழங்கியதையடுத்து, அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பாம்பினை பாதுகாப்பாக மீட்டு வேறு பகுதியில் விடுவித்துள்ளனர்.
தற்போது மழைக்காலம் நிலவி வருவதால் பாம்புகள் அடிக்கடி வெளிப்புற பகுதிகளுக்கு வரக்கூடிய வாய்ப்பு உள்ளதால், மக்கள் தங்கள் வீடுகளிலும் தோட்டங்களிலும் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.