தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில் மாபெரும் மீனவர்கள் போராட்டம் முல்லைத்தீவு நகரில் இன்று காலை இடம்பெற்றது.
நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகதந்துள்ள சுமார் ஆயிரத்திற்கு மேற்பட்ட மீனவர்கள் தமக்கு ஏற்பட்டுள்ள பல்வேறு பிரச்சினைகளை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
தேசிய மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் தலைவர்.ல ஹேர்மன் குமார, நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், வடமாகாண கடற்றொழிலாளர் இணையம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புக்கள் கலந்து கொண்டிருந்தன. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.