பிரான்ஸ் மூன்று ஆபிரிக்க நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு உயர்கல்வி கற்கை நெறிகளுக்கான விசா வழங்குவதை நிறுத்தியுள்ளது.
மாலி, நைஜர் மற்றும் புர்கினா பாசோ ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கே இந்த தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.
மேற்குறித்த மூன்று ஆபிரிக்க நாடுகளிலும் இராணுவ சதி மூலம் ஆட்சிக்கவிழ்ப்பு இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸின் ஆதரவு நாடாக இருந்த இந்த மூன்று நாடுகளுடனும் தற்போது முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது.
அதையடுத்தே இந்த முடிவை பிரான்ஸ் எட்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பிரான்ஸில் கல்வி கற்று வரும் மேற்குறித்த நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது கல்வியினை தடையின்றி தொடர முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்த மூன்று நாடுகளைச் சேர்ந்த 6ஆயிரத்து 700 மாணவர்கள் பிரான்ஸில் கல்வி கற்று வருகிறமை குறிப்பிடத்தக்கது.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.