(ஆதவன்)
இந்திய தலைமை அமைச்சர் மோடிக்கு பாகிஸ்தான் தலைமை அமைச்சர் ஷெபாஸ் ஷரீப் உட்படப் பல்வேறு தலைவர்கள் வாழ்த்துத் தெரிவித்துள்ளனர். சீன அரசதலைவர் ஜின் பிங் எதுவும் வெளியிடவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
சீன அயலுறவுப் பேச்சாளரிடமிருந்து கடந்த சனிக்கிழமை இந்திய அயலுயுறவு அலுவலகப் பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வாலுக்கு ஒரு வாழ்த்துச்செய்தி கிடைத்தது. எனினும் வேறு உயர்மட்ட தலைமைகளிடமிருந்து எந்தவித செய்தியும் கிடைக்கவில்லை என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதேவேளை, பாகிஸ்தான் தலைமை ஷெபாஸ் ஷரீப், மூன்றாவது முறையாக தலைமை அமைச்சராகத் தெரிவு செய்யப்பட்ட மோடிக்கு எனது வாழ்த்துகள். இந்திய மக்கள் உங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். உங்களது மக்களின் பாதுகாப்பில் எப்போதும் அக்கறையாக இருங்கள் எனத் தெரிவித்துள்ளார். இதற்கு எமது மக்களின் பாதுகாப்பில் நாங்கள் உறுதியாக உள்ளோம் என்று மோடி பதிலளித்தார் (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.