யாழ்ப்பாணம் குருநகர் கடற்பரப்பில் வைத்து இன்று காலை 183 கிலோ கேரளக் கஞ்சாவுடன் டிங்கி படகு ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த மீட்பு நடவடிக்கை இன்று அதிகாலை 3.30 மணியளவில் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் சந்தேகநபர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட படகு மற்றும் 92 கஞ்சா பொட்டலங்கள் என்பன யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு விசாரணைகள் பொலிஸாரால் இடம்பெற்றுவருகின்றது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.