(தமிழினி)
யாழ்ப்பாணம் திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பகுதிகளில் சுகாதாரச் சீர்கேட்டுடன் இயங்கிய உணவு கையாளும் நிலையங்களுக்கு நீதிமன்றத்தால் தண்டம் விதிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி பொது சுகாதார பரிசோதகர் பா.சஞ்சீவன் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர் குழுவால் திருநெல்வேலி மற்றும் கொக்குவில் பிரதேசங்களில் கடந்த மாதம் 29ஆம் திகதி இரவு தெருவோர வியாபார நிலையங்கள் பரிசோதனைக்குள்ளாக்கப்பட்டன.
இதன்போது மருத்துவ சான்றிதழ் இன்றி உணவை கையாண்டமை, தனிநபர் சுகாதாரம் இன்றி உணவை கையாண்டமை போன்ற அடிப்படையான சுகாதார வசதிகள் கூட இல்லாமல் சில வியாபார நிலையங்கள் இயங்கியமை பரிசோதனையில் இனங்காணப்பட்டது.
அவ்வாறு இனங்காணப்பட்ட மூன்று வியாபார உரிமையாளர்களுக்கு எதிராக யாழ். மேலதிக நீதிவான் நீதிமன்றில் பொது சுகாதார பரிசோதகரால் நேற்று திங்கட்கிழமை (10) வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.
வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மேலதிக நீதிவான் செ.லெனின்குமார் மூவருக்கும் மொத்தமாக 35 ஆயிரம் ரூபா தண்டம் விதித்ததுடன் கடும் எச்சரிக்கையும் விடுத்தார். (அ - ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.