புதுக்குடியிருப்பில் இருந்து யாழப்பாணத்துக்கு கடத்திவரப்பட்ட முதுரை மரக்குற்றிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. மரக்குற்றிகளை ஏற்றிவந்த சிறியரக லொறி மடக்கிப்பிடிக்கப்பட்டதுடன், அதன் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை ஏ-35 பிரதான வீதியில் நடந்துள்ளது. 12 முதுரை மரக் குற்றிகள் கைப்பற்றப்பட்டுள்ளன என்றும், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் தர்மபுரம் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி டி.எம்.சதுரங்க தெரிவித்துள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.