யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கலைப்பீடத்தின் ஐந்தாவது இளங்கலைமாணி ஆய்வு மாநாடு நேற்று நடைபெற்றது. கலைப்பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் ஆரம்பமான மாநாட்டில் இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சமூக விஞ்ஞானத்துறை ஓய்வுநிலைப் பேராசிரியர் எஸ். சந்திரபோஸ் சிறப்புரையை ஆற்றினார்.
"வெவ்வேறு துறைகளை இணைத்து மாற்றங்களை வலுவூட்டுவதற்காக அறிவைச் செயற்படுத்துதல்" எனும் தொனிப்பொருளோடு 16 ஆய்வுத் தடங்களில் இந்த மாநாடு நடைபெற்றது. இளங்கலைமாணி பட்டக்கற்கையின் இறுதியாண்டில் மாணவர்கள் நிறைவுறுத்திய ஆய்வுகளின் அளிக்கையாக இம்மாநாடு அமைந்தது. அவை ஆய்வுச் சுருக்கங்களாக மாநாட்டின் ஆய்வடங்கல் மூலமும் வெளியிடப்பட்டன. நிகழ்வில் முதன்மை விருந்தினராகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா கலந்துகொண்டார்.











361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.