யாழ்ப்பாணம் வண்ணை வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 லட்சம் ரூபா நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது.
யாழ்ப்பாணம் ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது.
இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 லட்சம் ரூபா பணத்தை ஆலய நிர்வாகத்தினரிடம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வழங்கியுள்ளார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.