[ஆதவன்]
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் பெண் கைதியொருவர் சிறைக்காவலர்களால் துன்புறுத்தப்படுகிறார் எனத் தெரிவித்து அந்தப் பெண்ணின் உறவினர்களால் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணக் காரியாலயத்தில் நேற்று வியாழக்கிழமை இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட் டுள்ளது.
யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள பெண் கைதியை அவரது உறவினர்கள் நேற்று நேரில் சென்று பார்வையிட்டனர். இதன்போதே அந்தப் பெண்கைதி தன்னை சிறைக்காவலர்கள் தாக்குவதாக உறவினர்களிடம் சொல்லியழுதுள்ளார். இதனையடுத்தே மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
'அண்மையில் இளைஞர் ஒருவர் பொலிஸாரின் சித்திரவதையால் உயிரிழந்திருந்தார். அந்தச்சம்பவத்தின் பின்னரும் இவ்வாறு கைதிகளைத் தாக்கும் போக்கு மாறவில்லை" என்று குறித்த பெண்ணின் உறவினர்கள் தெரிவித்தனர். [எ]
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.