யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் துறைசார் அமைச்சால் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அங்கு ஏற்பட்டுள்ள பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் - என்று சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்றது.
இதன்போது யாழ். பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது:
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விவகாரம் தொடர்பில் அமைச்சால் அறிக்கையொன்று கோரப்பட்டுள்ளது. விரைவில் இந்தப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எனவே, அமைச்சு உரிய வகையில் தலையீடு செய்யும். அனைத்து பல்கலைக்கழக கட்டமைப்பிலும் கல்வி நடவடிக்கை தடையின்றித் தொடரவேண்டும் என எதிர்பார்க்கின்றோம். எனவே, தடையாக உள்ள காரணிகளுக்கு தீர்வு வழங்கப்படும்.
அதேபோல வேலை நிறுத்தப் போராட்டத்தில் இறங்குவதற்கு முன்னர் அமைச்சுடன் பேச்சு நடத்த வேண்டும். அதில் தீர்வு இல்லையேல் தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்கலாம். அதுதான் பொருத்தமாகவும் இருக்கும் - என்றார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.