புதியவன்.
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல் நகரில் உள்ள விவசாய பீடத்தில் அக்ரீடெக்- 2024 நிகழ்வு நேற்று புதன்கிழமை(28) விவசாய பீட சமுதாய மேம்பாட்டு குழுவின் ஏற்பாட்டில் பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் விவசாய பீட கேட்போர் கூடத்தில் மூன்றாவது தடவையாக இடம்பெற்றது.
விவசாயிகள் தமது பிரச்னைகளை தீர்த்துக்கொள்ளவும், அதற்கூடாக விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களின் கள ஆய்வுக்கான களங்களை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் குறித்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
வட மாகாண துறைசார்ந்த பணிமனைகள், விவசாய துறை சார்ந்த முதலீட்டாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் முயற்சியாளர்களை இணைக்கும் களமாக இது அமைந்திருந்தது.
இதன்போது விவசாயம் சார்ந்த பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு, விவசாய பணிமனைகளின் உத்திகள் மற்றும் நிபுணர்களின் கள அனுபவங்கள் பகிரப்பட்டன.
இந் நிகழ்வில் விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் எஸ். வசந்தரூபா, டோக்கியோ யாழ்ப்பாண பல்கலைக்கழக பேராசிரியர் உசாமி கோச்சே, விவசாய பீட பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், துறைசார் நிபுணர்கள் மற்றும் பணிமனை அதிகாரிகள், மாகாண விவசாயப் பணிப்பாளர் சு.செந்தில்குமரன், கிளிநொச்சி மாவட்ட பிரதி மாகாணப் பணிப்பாளர் சூ.ஜெகதீஸ்வரி, விவசாயபீட மாணவர்கள், விவசாயிகள், விவசாயத்துறை சார்ந்து வேலை செய்யும் பங்காளர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.