இன்பன்.
கடந்த கிழமை வெளியாகிய க.பொ.த சாதாரண தர பரீட்சையில் 30 ஆண்டுகளின் பின்னர் யாழ். புனித மரியாள் வித்தியாலய மாணவர்கள் சிறந்த பெறுபேற்றைப் பெற்றமைக்காக பாடசாலை சமூகத்தினால் பாடசாலை அதிபர் தலைமையில் நேற்று புதன்கிழமை கௌரவிப்பு நிகழ்வு இடம்பெற்றது.
மேலும் இவ்வருடம் இடம்பெற்ற தரம் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் மாணவி ஒருவர் 160 புள்ளிகளைப் பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதேவேளை க.பொ.த (சா/தா) தர பரீட்சையில் 11 மாணவர்கள் சித்தியடைந்துள்ளதுடன் மாணவி ஒருவர் 8A B பெறுபேற்றினைப் பெற்று வரலாற்று சாதனை புரிந்துள்ளார். மேலும் ஏனைய மாணவர்கள் 7A, 6A பெறுபேறுகளை பெற்றுள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு குறித்த பாடசாலையானது பூசிய அடைவைப் பெற்றிருந்ததுடன் இவ்வருடம் 64வீதம் சித்தியுயர்வைப் பெற்று முன்னிலையிலுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப் பெறுபேறுகளை பெற்ற மாணவர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரைப்பட்டு வாழ்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வில் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.