(புதியவன்)
தமது இந்திய பயணத்தின் "தொலைநோக்கு அறிக்கை"யின் பிரகாரம் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தி அறிமுகம் செய்யப்பட்டுள்ள யு.பி.ஐ பணப் பரிமாற்ற முறை, சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் எனவும் இதன் மூலம் தமிழ்நாடு, மும்பை ஆகியவற்றுடன் இலங்கை தொடர்புகளை ஏற்படுத்தும் எனவும் இதனால் 4 இலட்சம் வர்த்தகர்கள் பயனடைவார்கள் எனவும் அரச தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இந்திய வெளியுறவு அமைச்சருடனான பேச்சுவார்த்தை நம்பிக்கைக்குரிய முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுவதாகவும் மொரீஷியஸுடனான ஒத்துழைப்பு புதிய தொடர்புகளை மேம்படுத்தும் முயற்சியை மேலும் உறுதி செய்வதாகவும் அரச தலைவர் தெரிவித்தார்.
யு.பி.ஐ பணப்பரிமாற்ற முறையை நிகழ்நிலை மூலம் அறிமுகம் செய்யும் நிகழ்வில் அரச தலைவர் இதனைத் தெரிவித்தார். (ஏ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.