ஐ.பி.எல். தொடரில் நேற்று இரவு நடைபெற்ற ஆட்டத்தில், ராஜஸ்தானைத் தோற்கடித்து புள்ளிப் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தது குஜராத் அணி.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ராஜஸ்தான் அணி முதலில் களத்தடுப்பைத் தீர்மானித்தது. முதலில் துடுப்பெடுத்தாடிய குஜ ராத் அணியின் ஆரம்ப வீரர்களாக சாய் சுதர்சன் மற்றும் கில் இருவ ரும்களமிறங்கினார்கள். இரண்டே ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் கில்.
சாய் சுதர்சன், பட்லர் இருவரும் இணைந்து இன்னிங்ஸை நல்ல முறையில் கட்டமைத்தனர். 36 ஓட்டங்களுடன் பட்லர் ஆட்டமிழந் தார். பதிலுக்குக் களமிறங்கிய சாருக் கானும் 36 ஓட்டங்களைப் பெற்றார். சாய் சுதர்சனின் இன்னிங்ஸ் 82 ஓட்டங்களுடன் முடிவுக்கு வந்தது. தெவட்டியா கடைசிக் கட்ட அதிரடியைக் கையிலெடுத்து 12 பந்துகளில் 24 ஓட்டங்களைப் பெற்றார். முடிவில் 6 இலக்குகளை இழந்து 216 ஓட்டங்களைப் பெற்றது குஜராத்.
பதிலுக்குக்குக் களமிறங்கிய ராஜஸ்தானுக்கு, ஆரம்ப வீரர் சாம்சன் ஒரு முனையில் நிலைத்தாலும் மறுமுனையில் ஜெய்ஷ்வால் 6 ஓட்டங்களுடனும், ரணா ஓர் ஓட்டத்துடனும், ரியான் பராக் 26 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து ஏமாற்றினார்கள். சஞ்சுசாம்சன் 41 ஓட்டங்களுடன் வீழ்ந்தார். கடைசி நம்பிக்கையான ஹெட்மயர் 32 பந்துகளில் 52 ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தார். இறுதியில் ராஜஸ்தான் அணியால் 159 ஓட்டங்களையே பெறமுடிந்தது. 58 ஓட்டங்களால் வென்றது குஜராத்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.