(புதியவன்)
வட இலங்கையின் மன்னார் உள்ளிட்ட பல இடங்களில் ''ட்ரோன்களை'' பயன்படுத்தி படமெடுப்பதற்கு இந்தியா அனுமதி கோரியுள்ளதாகவும் இது தொடர்பாக இந்திய தூதரகத்தால் இலங்கை அரசுக்கு அனுப்பப்பட்ட கோரிக்கைக் கடிதம் தற்போது பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மன்னாரின் மணல் திட்டுகள், இராட்சத மரங்கள் மற்றும் நெடுந்தீவு உள்ளிட்ட எட்டு பிரபலமான இடங்களில் ''ட்ரோன்களை'' பயன்படுத்தி படமெடுக்க அனுமதி கோரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு "ட்ரோன்களால்" படமாக்கப்படும் காட்சிகள் இலங்கைக்கு யோகாவை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சிக்கு பயன்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் இது தொடர்பாக பாதுகாப்பு அமைச்சை தொடர்புகொண்டு கேட்டபோது இந்த விடயம் தொடர்பில் மேலதிக விடயங்களை ஆராந்த பின்னரே பதிலளிக்க முடியும் என பாதுகாப்பு அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.