மன்னார் மாவட்டப் பொதுமருத்துவமனைக்கு வடமாகாண ஆளுநர் என்.வேதநாயகன் தலைமையில் விசேட குழுவினர் நேற்றுச் சென்று அபிவிருத்தி நடவடிக்கைகள் குறித்து ஆராய்ந்தனர். இதன்போது மருத்துவமனையில் புனரமைக்கப்பட்ட மருத்துவப் பரிசோதனை நிலையங்கள் திறந்து வைக்கப்பட்டதைத் தொடர்ந்து விசேட கூட்டம் இடம்பெற்றது.
இதில் மருத்துவமனையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் குறித்து மருத்துவமனை அபிவிருத்திக் குழு உறுப்பினர்களால் ஆளுநரின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக தேவைகள் மற்றும் மருத்துவமனையிலுள்ள அதிகமான கட்டடங்கள் பழமை வாய்ந்த கட்டடங்களாக உள்ளமையினால் அவற்றை மாற்றியமைத்தல் மற்றும் நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டன.
மேலும் நோயாளிகள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள், அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டன.
இதன்போது மன்னார் மாவட்டப் பொது மருத்துவமனையில் நிலவும் அனைத்துப் பிரச்சினைகளையும் நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுப்போம் என வடமாகாண ஆளுநர் தெரிவித்தார்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.