பொதுவாகவே பிரதோஷம், சிவராத்திரி சிவனுக்கு உகந்ததாக கருதப்படுகிறது. பெண்களுக்கு 9 ராத்திரி நவராத்திரி என்றும், ஆண்களுக்கு ஒரு ராத்திரி சிவராத்திரி என்றும் புராணங்கள் கூறுகிறது. இந்த சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் நினைத்தது நடக்கும் என்பது ஐதீகம்.
இந்து மத நம்பிக்கையின் அடிப்படையிலும், கனவு சாஸ்திரத்தின் படி எதிர்காலத்தில் நடக்கும் சில விஷயங்கள் நம் கனவில் வரும் என்று சொல்லப்படுகிறது. அவற்றைச் சரியாகப் புரிந்து கொண்டால், வரப்போகும் ஆபத்துக்களைத் தவிர்க்கலாம் என்றும் கருதப்படுகிறது. சில சமயங்களில் அந்த கனவுகள் சுப அறிகுறிகளாக இருக்கும் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.
சிவராத்திரியை முன்னிட்டு சிவபெருமான் கனவில் முன்கூட்டியே அறிவுரைகளை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.
இந்து நாட்காட்டியின் படி, மகாசிவராத்திரி, மாசி மாதத்தில் கிருஷ்ண பக்ஷத்தின் பதினான்காவது நாளில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு, மகாசிவராத்திரி பிப்ரவரி 26, புதன்கிழமை வருகிறது.
அன்றைய இரவு தான் கண்விழித்து விரதம் இருப்பார்கள். இந்தத் திகதியில் ருத்ராபிஷேகம் செய்வதால், சிவபெருமான் விரைவில் மகிழ்ச்சி அடைகிறார். விரதம், வழிபாடு, விழிப்பு, சிவ நாமத்தை தியானம் செய்தல் ஆகியவை மூலம் சிவனின் அருளை பெறலாம்.
அபிஷேகம் - மகாசிவராத்திரிக்கு முன், சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வது போல் கனவு கண்டால், சிவபெருமான் மகிழ்ச்சி அடைந்து, அந்த நபரின் அனைத்து கஷ்டங்களையும் விரைவில் நீக்குவார் என்று அர்த்தம். மேலும் இந்த கனவு வாழ்க்கையில் மகிழ்ச்சியின் வருகையைக் குறிக்கிறது.
வில்வ இலைகள் - சிவராத்திரிக்கு முன்பு உங்கள் கனவில் வில்வ இலைகளோ, அல்லது வில்வ மரத்டை கண்டால் நிதி பிரச்சனைகளை தீரும் என்று சொல்லப்படுகிறது.
ருத்ராட்சம் - ருத்ராட்சம் மிகவும் மங்களகரமானதாகும். பொதுவாகவே ருத்ராட்சம் கனவில் வருவது மிகவும் சிறப்பாகும். அதிலும், சிவராத்திரி முன்பு கனவில் தோன்றினால் துன்பங்கள் விலகி நோய் நொடியின்றி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம் என்று சொல்லப்படுகிறது.
கருப்பு சிவலிங்கம் - கருப்பு சிவலிங்கம் சிவபெருமானின் சின்னம். மஹாசிவராத்திரிக்கு முன் உங்கள் கனவில் கருப்பு சிவலிங்கத்தைக் கண்டால், உங்கள் வேலையில் விரைவில் பதவி உயர்வு கிடைக்கும் என்று அர்த்தம்.
பாம்பு - மகாசிவராத்திரிக்கு முன் பாம்பு அல்லது பாம்புகளின் புற்றுகளை கண்டால், அது உங்கள் செழிப்பு மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படுகிறது.
நந்தி - சிவபெருமானின் வாகனமான நந்தி இல்லாவிட்டால் சிவபெருமானின் குடும்ப வழிபாடு முழுமையடையாது. சிவராத்திரிக்கு முன்போ அல்லது சிவராத்திரியின்போதோ உங்கள் கனவில் நந்தியை கண்டால் சிவபெருமானின் அருள் கிடைக்கும் என்று அர்த்தம். இந்த கனவு உங்களின் வெற்றியைக் குறிக்கிறது.
திரிசூலம் - சிவன் எப்போதும் திரிசூலம் வைத்திருப்பார். திரிசூலத்திற்கு 3 விளிம்புகள் உள்ளன. அவை காமம், கோபம் மற்றும் பேராசை ஆகியவற்றைக் குறிக்கின்றன. படைப்பின் ஒற்றுமையை நிலைநாட்ட சிவபெருமான் திரிசூலத்தைப் பயன்படுத்துகிறார். மஹாசிவராத்திரியின் போது இந்த கனவு வந்தால், மகாதேவன் உங்கள் எல்லா கஷ்டங்களையும் அழிக்கப் போகிறார் என்று அர்த்தம்.
உடுக்கை - புராணங்களின்படி.. சிவபெருமான் 14 முறை உடுக்கை வாசித்தார். அதன் பிறகு படைப்பில் ராகங்களும் தாளங்களும் பிறந்தன. எனவே மஹாசிவராத்திரி அன்று உடுக்கையை தரிசிப்பது மிகவும் சிறப்பானது. உடுக்கையின் கனவு வாழ்க்கையின் ஸ்திரத்தன்மையைக் குறிக்கிறது. இந்த கனவு உங்கள் வீட்டில் திருமணம் நடக்க போவதை குறிக்கும் அடையாளம்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.