வரலாற்றில் இன்று – 02.07.2025
வரலாற்றில் இன்று – 02.07.2025

ஜூலை 2 (July 2) கிரிகோரியன் ஆண்டின் 183 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 184 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 182 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

437 – மூன்றாம் வலந்தீனியன் மேற்கு உரோமைப் பேரரசராக முடிசூடினார்.
936 – கிழக்கு பிரான்சியாவின் (இன்றைய செருமனி) மன்னர் என்றி இறந்தார். இவரது மகன் முதலாம் ஒட்டோ புதிய மன்னராக முடிசூடினார்.
1698 – தோமசு சேவரி முதலாவது நீராவிப் பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
1776 – அமெரிக்கப் புரட்சி: பெரிய பிரித்தானியாவுடனான தொடர்புகளைத் துண்டிக்கும் தீர்மானத்தை அமெரிக்க சட்டமன்றம் எடுத்தது. ஆனாலும் இறுதி விடுதலைச் சாற்றுரை சூலை 4 இலேயே வெளியிடப்பட்டது.
1822 – அடிமைகளுக்கிடையே கிளர்ச்சியைத் தூண்டிய குற்றங்களுக்காக அமெரிக்காவின் தென் கரொலைனா மாநிலத்தில் 35 அடிமைகள் தூக்கிலிடப்பட்டனர்.
1823 – பிரேசிலில் போர்த்துக்கேயரின் ஆட்சி முடிவுக்கு வந்தது.
1839 – கியூபாக் கரையோரத்தில் இருந்து 20 மைல் தூரத்தில் 53 ஆப்பிரிக்க அடிமைகள் அர்மிஸ்டாட் என்ற அடிமைக் கப்பலைக் கைப்பற்றினர்.
1853 – உருசியா துருக்கியின் மீது படையெடுத்தது. கிரிமியப் போர் ஆரம்பமானது.
1871 – இத்தாலியப் பேரரசர் இரண்டாம் விக்டர் இம்மானுவேல் திருத்தந்தை நாடுகளிடம் இருந்து தான் கைப்பற்றிய ரோம் நகரை அடைந்தார்.
1881 – அமெரிக்க அரசுத்தலைவர் சேம்சு கார்ஃபீல்டு சுடப்பட்டுப் படுகாயமடைந்தார். இவர் செப்டம்பர் 19 இல் மரணமானார்.
1897 – பிரித்தானிய-இத்தாலியப் பொறியாளர் மார்க்கோனி வானொலிக்கான காப்புரிமத்தை இலண்டனில் பெற்றார்.
1921 – முதலாம் உலகப் போர்: அமெரிக்க அரசுத்தலைவர் வாரன் ஜி. ஹார்டிங் செருமனியுடனான போரை முடிவுக்குக் கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
1934 – செருமனியில் நீள் கத்திகளுடைய இரவுப் படுகொலைகள் முடிவுக்கு வந்தது.
1937 – அமேலியா ஏர்ஃகாட் மற்றும் பிரெட் நூனன் ஆகியோர் வானூர்தியில் உலகைச் சுற்றும் முயற்சியில் அமைதிப் பெருங்கடல் பகுதியில் காணாமல் போயினர்.
1940 – அரண்டோரா இசுட்டார் என்ற பிரித்தானியக் கப்பல் செருமனியின் யூ-47 நீர்மூழ்கியினால் அத்திலாந்திக்குப் பெருங்கடலில் மூழ்கடிக்கப்பட்டதில் 800 பேர் உயிரிழந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் பொதுமக்கள் ஆவர்.
1940 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் சுபாஸ் சந்திர போஸ் கல்கத்தாவில் கைது செய்யப்பட்டார்.
1962 – முதலாவது வோல் மார்ட் அங்காடி ஆர்கன்சா மாநிலத்தில் திறக்கப்பட்டது.
1966 – பிரெஞ்சு இராணுவத்தினர் பசிபிக் பெருங்கடலில் தமது முதலாவது அணுவாயுதச் சோதனையை நிகழ்த்தினர்.
1976 – வியட்நாம் குடியரசின் வீழ்ச்சியை அடுத்து 1954 முதல் பிரிந்திருந்த கம்யூனிச வடக்கு வியட்நாம் தெற்கு வியட்நாமுடன் வியட்நாம் சோசலிசக் குடியரசு என்ற பெயரில் இணைந்தது.
1986 – சிலியின் இராணுவ ஆட்சியாளர் அகஸ்தோ பினோசெட்டுக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களின் போது இருவர் உயிருடன் எரிக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர்.
1997 – ஆசிய நிதி நெருக்கடி ஆரம்பமானது.
2002 – உலகத்தை பலூனில் தனியே இடைவேளை விடாது பறந்த முதல் மனிதர் என்ற சாதனையை ஸ்டீவ் பொசெட் பெற்றார்.
2004 – ஆசியான் அமைப்பில் பாக்கித்தான் இணைந்தது.
2010 – காங்கோவில் எண்ணெய் நிரப்பிய பாரவுந்து ஒன்று வெடிதத்தில் 230 பேர் உயிரிழந்தனர்.
2013 – உலகளாவிய வானியல் ஒன்றியம் புளூட்டோவின் நான்காம், ஐந்தாம் சந்திரன்களுக்கு கெர்பரோசு, ஸ்டிக்சு எனப் பெயரிட்டது.
2013 – 6.1 அளவு நிலநடுக்கம் இந்தோனேசியாவின் அச்சே பகுதியில் இடம்பெற்றதில் 42 பேர் உயிரிழந்தனர், 420 பேர் காயமடைந்தனர்.
2016 – பக்தாதில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 341 பேர் உயிரிழந்தனர்.


பிறப்புகள்
1489 – தாமஸ் க்ரான்மர், ஆங்கிலேயப் பேராயர், புனிதர் (இ. 1556)
1862 – வில்லியம் ஹென்றி பிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (இ. 1942)
1877 – ஹேர்மன் ஹெசே, நோபல் பரிசு பெற்ற செருமன்-சுவிசு எழுத்தாளர் (இ. 1962)
1902 – க. கணபதிப்பிள்ளை, இலங்கைத் தமிழறிஞர், பேராசிரியர் (இ. 1968)
1903 – அலெக் டக்ளஸ் - ஹோம், பிரித்தானியாவின் 66வது பிரதமர் (இ. 1995)
1906 – அன்சு பேத்து, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 2005)
1910 – டி. வி. தாமஸ், இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1977)
1923 – விஸ்லவா சிம்போர்ஸ்கா, நோபல் பரிசு பெற்ற போலந்துக் கவிஞர் (இ. 2012)
1925 – பத்திரிசு லுமும்பா, கொங்கோவின் 1வது அரசுத்தலைவர் (இ. 1961)
1929 – இமெல்டா மார்க்கோஸ், பிலிப்பீன்சின் 10வது முதல் பெண்மணி
1930 – ஒ. வே. விஜயன், மலையாள எழுத்தாளர் (இ. 2005)
1938 – சி. கே. என். பட்டேல், இந்திய-அமெரிக்கப் பொறியியலாளர், இயற்பியலாளர்
1940 – எம். ஏ. குலசீலநாதன், ஈழத்து கருநாடக, மெல்லிசைப் பாடகர், வானொலிக் கலைஞர் (இ. 2004)
1941 – சி. ஜெயபாரதி, மலேசியத் தமிழறிஞர் (இ. 2015)
1942 – வீ. மாரியப்பன், மலேசிய எழுத்தாளர்
1946 – சே. மாணிக்கம், தமிழக எழுத்தாளர்
1946 – ரிச்சார்ட் ஆக்செல், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க மருத்துவர்
1947 – வீ. கு. சந்திரசேகரன், மலேசிய எழுத்தாளர்
1949 – இராசமனோகரி புலேந்திரன், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (இ. 2014)
1957 – பிரெட் ஹார்ட், கனடிய மற்போர் வீரர்
1958 – மயில்சாமி அண்ணாதுரை, தமிழகப் பொறியலாளர், விண்வெளி ஆய்வாளர்
1965 – கௌதமி, தென்னிந்திய நடிகை
1986 – லின்சி லோகன், அமெரிக்க நடிகை
1990 – மார்கோட் ரொப்பி, ஆத்திரேலிய நடிகை


இறப்புகள்
1566 – நோஸ்ராடாமஸ், பிரான்சிய சோதிடர், நூலாசிரியர் (பி. 1503)
1591 – வின்செஞ்சோ கலிலீ, இத்தாலிய இசைக்கலைஞர், இசையமைப்பாளர் (பி. 1520)
1621 – தாமசு ஃஆரியட், ஆங்கிலேய வானியலாளர் (பி. 1560)
1757 – சிராச் உத் தவ்லா, வங்காளத்தின் கடைசி நவாப் (பி. 1733)
1778 – இழான் இழாக்கு உரூசோ, சுவிட்சர்லாந்து மெய்யியலாளர், இசையமைப்பாளர் (பி. 1712)
1843 – சாமுவேல் ஹானிமன், செருமன் மருத்துவர் (பி. 1755)
1949 – கியார்கி திமித்ரோவ், பல்கேரிய அரசியல்வாதி (பி. 1882)
1961 – ஏர்னெஸ்ட் ஹெமிங்வே, நோபல் பரிசு பெற்ற அமெரிக்க எழுத்தாளர் (பி. 1899)
1963 – சேத் பார்னசு நிக்கல்சன், அமெரிக்க வானியலாளர் (பி. 1891)
1977 – விளாடிமிர் நபோக்கோவ், உருசிய எழுத்தாளர் (பி. 1899)
1988 – வைபர்த் தவுகிளாசு, கனடிய வானியலாளர் (பி. 1894)
1992 – காமரோன் தே லா ஈஸ்லா, எசுப்பானியப் பாடகர் (பி. 1950)
1997 – ஜேம்ஸ் ஸ்டுவர்ட், அமெரிக்க நடிகர் (பி. 1908)
2013 – டக்லஸ் எங்கல்பர்ட், கணினிச் சுட்டியைக் கண்டுபிடித்தவர் (பி. 1925)
2016 – எலீ வீசல், இனவழிப்பில் இருந்து தப்பியவர், செயற்பாட்டாளர் (பி. 1928)

116 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.