வரலாற்றில் இன்று – 07.10.2025
வரலாற்றில் இன்று – 07.10.2025

ஒக்டோபர் 7 (October 7) கிரிகோரியன் ஆண்டின் 280 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 281 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 85 நாட்கள் உள்ளன.


நிகழ்வுகள்

1690 – ஆங்கிலேயர் கியூபெக் நகரைத் தாக்கினர்.
1737 – இந்தியா, வங்காளத்தில் கிளம்பிய 40 அடி உயர அலை சுமார் 300,000 பேரைக் கொன்றது.
1769 – ஆங்கிலேய நாடுகாண் பயணி கப்டன் ஜேம்ஸ் குக் நியூசிலாந்தைக் கண்டுபிடித்தான்.
1806 – ஆங்கிலேயர் ரால்ஃப் வெட்ஜ்வூட் என்பவரால் கார்பன் தாள் காப்புரிமம் பெறப்பட்டது.
1840 – இரண்டாம் வில்லியம் நெதர்லாந்தின் மன்னனாக முடிசூடினான்.
1874 – யாழ்ப்பாணத்துக்கான தந்தி இணைப்பு அநுராதபுரம் வரையில் நீடிக்கப்பட்டது.
1919 – நெதர்லாந்தின் கே.எல்.எம் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டது.
1940 – இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனி ருமேனியாவைத் தாக்கியது.
1942 – அமெரிக்கா மற்றும் பிரித்தானியா ஐக்கிய நாடுகள் அவையை ஆரம்பிக்கப்போவதாக அறிவித்தன.
1943 – இரண்டாம் உலகப் போர்: வேக் தீவில் கைப்பற்றப்பட்ட அமெரிக்கக் கைதிகள் 100 பேரை ஜப்பான் கொன்றது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அவுஷ்விட்ஸ் வதை முகாமில் யூதக் கைதிகளின் கிளர்ச்சி இடம்பெற்றது.
1949 – ஜேர்மன் ஜனநாயகக் குடியரசு உருவாக்கப்பட்டது.
1950 – சீனா திபெத்து மீதான தாக்குதலை ஆரம்பித்தது.
1951 – மலேயத் தீவிரவாதிகள் பிரித்தானிய தூதுவர் சேர் ஹென்றி கேர்னி என்பவரைக் கொன்றனர்.
1951 – இஸ்ரேலிய அரசு டேவிட் பென்-கூரியன் என்பவரால் அமைக்கப்பட்டது.
1958 – பாகிஸ்தான் அதிபர் இஸ்காண்டர் மிர்சா ஜெனரல் அயூப் கான் ஆதரவுடன் 1956 அரசமைப்பை நிராகரித்து இராணுவ ஆட்சியைக் கொண்டுவந்தார்.
1959 – சோவியத் விண்கலம் லூனா 3 சந்திரனின் அதி தூரத்தியப் புகைப்படங்களை பூமிக்கு அனுப்பியது.
1962 – சோவியத் ஒன்றியம் நோவயா சிம்லியா என்ற இடத்தில் அணுக்கரு சோதனையை நிகழ்த்தியது.
1963 – எயிட்டி மற்றும் டொமினிக்கன் குடியரசு ஆகியவற்றை சூறாவளி ஃபுளோரா தாக்கியதில் 7,190 பேர் கொல்லப்பட்டனர்.
2001 – ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா மூன்று முறை விமானத்தாக்குதல் நடத்தியது. பயங்கரவாதத்திற்கு எதிரான போர் அமெரிக்கா மற்றும் அதன் நேசநாடுகளின் உதவியுடன் ஆரம்பமாகியது.
2004 – கம்போடியாவின் நொரொடொம் சிஹானூக் மன்னர் பதவியில் இருந்து விலகினார்.

பிறப்புக்கள்

1931 – டெஸ்மண்ட் டூட்டு, தென்னாபிரிக்க ஆயர், நோபல் பரிசு பெற்றவர்
1935 – தாமஸ் கெநீலி, ஆத்திரேலிய எழுத்தாளர்
1952 – விளாடிமிர் பூட்டின், ரஷ்ய முன்னாள் அதிபர்
1978 – சகீர் கான் , இந்திய வேகபந்து வீச்சாளர்.
1979 – நரேன், தென்னிந்தியத் திரைப்பட நடிகர்

இறப்புகள்

1708 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு (பி. 1666)
1967 – நோர்மன் ஏஞ்செல், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1872)
1974 – சி. மு. இராசமாணிக்கம், முன்னாள் இலங்கைத் தமிழரசுக் கட்சி பட்டிருப்பு பாராளுமன்ற உறுப்பினர்
1984 – அப்துல் காதர் லெப்பை, ஈழத்துக் கவிஞர் (பி. 1913)
1994 – நீல்ஸ் காஜ் ஜேர்ன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1911)

சிறப்பு நாள்

கிழக்கு ஜேர்மனி – குடியரசு நாள்

128 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.