வரலாற்றில் இன்று – 14.10.2025
வரலாற்றில் இன்று – 14.10.2025

ஒக்டோபர் 14 (October 14) கிரிகோரியன் ஆண்டின் 287 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 288 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 78 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1066 – இங்கிலாந்தில் “ஹாஸ்டிங்ஸ்” என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் முதலாம் வில்லியமின் படைகள் இரண்டாம் ஹரோல்ட் மன்னனைக் கொன்றனர்.
1322 – ஸ்கொட்லாந்தின் முதலாம் ரொபேர்ட் பைலாண்ட் என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் இங்கிலாந்தின் இரண்டாம் எட்வேர்ட் மன்னனைத் தோற்கடித்தான். ஸ்கொட்லாந்தின் விடுதலையை எட்வேர்ட் ஏற்றுக் கொண்டான்.
1582 – கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
1586 – ஸ்கொட்லாந்தின் முதலாம் மேரி இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்துக்கு எதிராக சதி மேற்கொண்டதாக குற்றஞ் சாட்டப்பட்டாள்.
1758 – ஏழாண்டுப் போர்: ஆஸ்திரியா பிரஷ்யாவை வெற்றி கொண்டது.
1773 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் தேயிலைக் கப்பல் மேரிலாந்தில் எரிக்கப்பட்டது.
1806 – முதலாம் நெப்போலியன் புரூசிய இராணுவத்தை தோற்கடித்தான்.
1888 – Roundhay Garden Scene என்ற முதலாவது அசையும் படத்தை லூயி லெ பிரின்ஸ் தயாரித்தார்.
  1903 – யாழ்ப்பாணத்தின் SS Jaffna என்ற பயணிகள் கப்பல் நெடுந்தீவுக்கு பயணித்தது.
1912 – முன்னாள் அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் விஸ்கொன்சின் மாநிலத்தின் மில்வாக்கி நகரில் வைத்து சுடப்பட்டார்.
1913 – ஐக்கிய இராச்சியத்தில் இடம்பெற்ற நிலக்கரிச் சுரங்க விபத்தில் 439 பேர் கொல்லப்பட்டனர்.
1925 – டமாஸ்கசில் பிரெஞ்சுக்காரர்களுக்கெதிரான போராட்டம் ஆரம்பமாயிற்று.
1926 – சிறுவர் நூல் வின்னீ-த-பூ (Winnie-the-Pooh) வெளியிடப்பட்டது.
1933 – நாசி ஜெர்மனி தேசங்களின் அணியில் இருந்து விலகியது.
1939 – இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் நீர்மூழ்கிக் கப்பல் பிரித்தானியக் கடற்படையினரின் “ரோயல் ஓக்” என்ற போர்க்கப்பலைத் தாக்கி மூழ்கடித்தது. 800 மாலுமிகள் கொல்லப்பட்டனர்.
1943 – போலந்தில் நாசிகளின் “சோபிபோர்” வதைமுகாமில் இருந்த 600 கைதிகள் கிளர்ச்சியை மேற்கொண்டதில் 11 நாசிகள் கொல்லப்பட்டனர். முன்னூறுக்கும் அதிகமான கைதிகள் சிறையை உடைத்துத் தப்பினர்.
1948 – இலங்கையின் முதலாவது நாடாளுமன்றம் கூடியது.
1956 – இந்தியத் தலித் தலைவர் அம்பேத்கர் தனது 385,000 ஆதரவாளர்களுடன் பௌத்தத்திற்கு மதம் மாறினார்.
1962 – கியூபாவுக்கு மேல் பறந்த அமெரிக்க U-2 விமானம் சோவியத் அணு ஆயுதங்களைப் படம் பிடித்தது.
1964 – லியோனிட் பிரெஷ்னெவ் சோவியத் ஒன்றியத்தின் அதிபராகவும் சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் நாயகமும் ஆனார். நிக்கிட்டா குருசேவ் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
1964 – ஐக்கிய அமெரிக்காவின் மனித உரிமைப் போராளி மார்ட்டின் லூதர் கிங் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.
1968 – விண்ணிலிருந்தான முதலாவது நேரடி தொலைக்காட்சி அஞ்சல் அப்போலோ 7 விண்கலத்தில் இருந்து மேற்கொள்ளப்பட்டது.
1973 – தாய்லாந்தில் பல்கலைக்கழக மாணவர்கள் மக்களாட்சிக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டதில் 77 பேர் கொல்லப்பட்டு 857 பேர் காயமடைந்தனர்.
1987 – டெக்சாசில் ஜெசிக்கா என்ற 18-மாதக் குழந்தை கிணறு ஒன்றில் வீழ்ந்தது. 58 மணி நேரத்தின் பின்னர் இது உயிருடன் மீட்கப்பட்டது. இந்த மீட்புப் போராட்டம் தொலைக்காட்சியில் நேரடியாகக் காண்பிக்கப்பட்டது.

பிறப்புகள்

1643 – முதலாம் பகதூர் ஷா, இந்தியாவின் முகலாய மன்னன் (இ. 1712)
1873 – ஜூல்ஸ் ரிமெட், பிரெஞ்சுத் தொழிலதிபர் (இ. 1954)
1882 – சார்லி பார்க்கர், ஆங்கிலேயத் துடுப்பாளர் (இ. 1959)
1884 – சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக் கல்வியை அறிமுகப்படுத்தியவர், சட்டத்தரணி (இ. 1969)
1890 – டுவைட் டி. ஐசனாவர், ஐக்கிய அமெரிக்காவின் 34ஆவது குடியரசுத் தலைவர் (இ. 1969)
1900 – வி எட்வர்ட் டெமிங், அமெரிக்க எழுத்தாளர் (இ. 1993)
1930 – மொபுட்டு செசெ செக்கோ, சயீர் நாட்டின் குடியரசுத் தலைவர் (இ. 1997)
1942 – சிவசங்கரி, தமிழக எழுத்தாளர்
1976 – திலகரத்ன டில்சான், இலங்கைத் துடுப்பாளர்
1977 – சயீத் அஜ்மல், பாக்கித்தானியத் துடுப்பாளர்
1978 – அஷர் ரேமண்ட், அமெரிக்கப் பாடகர், நடிகர்
1981 – கவுதம் கம்பீர், இந்தியத் துடுப்பாளர்
1990 – ஜோர்டன் கிளார்க், ஆங்கிலேயத் துடுப்பாளர்

இறப்புகள்

1803 – அய்மே ஆர்கண்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர் (பி. 17500)
1944 – இர்வின் ரோமெல், செருமானிய இராணுவத் தளபதி (பி. 1891)
1977 – பிங்கு கிராசுபி, அமெரிக்க நடிகர் (பி. 1903)
1981 – கே. பி. ஹரன், தமிழ்ப் பத்திரிகையாளர் (பி. 1906)
2005 – சுந்தர ராமசாமி, தமிழ் எழுத்தாளர் (பி. 1931)
2009 – சி. பி. முத்தம்மா, இந்தியப் பெண் சாதனையாளர் (பி. 1924)
2014 – காவலூர் ராஜதுரை, ஈழத்து எழுத்தாளர் (பி. 1931)

சிறப்பு நாள்

உலகத் தர நிர்ணய நாள்

138 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.