வரலாற்றில் இன்று – 19.01.2025
வரலாற்றில் இன்று – 19.01.2025

ஜனவரி 19 கிரிகோரியன் ஆண்டின் 19 ஆம் நாளாகும். ஆண்டு முடிவிற்கு மேலும் 346 (நெட்டாண்டுகளில் 347) நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

1419 – நூறாண்டுப் போர்: நார்மாண்டியை கைப்பற்றிய இங்கிலாந்தின் ஐந்தாம் ஹென்றியிற்கு ரொவ்வென் சரணடைந்தது.
1511 – மிரான்டோலா பிரெஞ்சிற்கு சரணடைந்தார்.
1764 – ஜான் வில்க்ஸ் ஐக்கிய இராச்சியத்தின் மக்களவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
1788 – இங்கிலாந்தில் இருந்து கைதிகளை ஏற்றி வந்த இரண்டாவது தொகுதி கப்பல்கள் நியூ சவுத் வேலிசின் பொட்டனி பே பகுதியை வந்தடைந்தது.
1806 – நன்னம்பிக்கை முனையை பிரித்தானியா பிடித்தது.
1817 – சிலி மற்றும் பெருவை விடுதலை செய்ய ஜோஸ் டெ சான் மார்ட்டின் தலைமையில் 5,423 போர் வீரர்கள் கொண்ட படை, அர்கெந்தீனாவிலிருந்து அன்டெஸ்சைக் கடந்தது.
1829 – யொஹான் வூல்ப்காங் ஃபொன் கேத்தாவின் பவுஸ்ட் பகுதி 1 பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.
1839 – பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி யேமனின் ஏடென் நகரைக் கைப்பற்றியது.
1853 – ஜூசெப்பே வேர்டியின் ஆப்பெரா இல் ட்ரவடோர் ரோமில் பிரமாதமான பாராட்டுகளைப் பெற்றது.
1861 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்காவிலிருந்து பிரிந்த ஜோர்ஜியா தென் கரொலைனா, புளோரிடா, மிசிசிப்பி, மற்றும் அலபாமா ஆகிய மாநிலங்களுடன் சேர்ந்தது.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மில் ஸ்பிரிங்ஸ் சண்டையில் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு தனது முதல் பெரிய தோல்வியை பெற்றது.
1899 – ஆங்கிலோ-எகிப்திய சூடான் அமைக்கப்பட்டது.
1903 – ஐக்கிய அமெரிக்காவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே முதலாவது வானொலி ஒலிபரப்பு ஆரம்பமாயிற்று.
1917 – லண்டனில் ஆயுதக் களஞ்சியம் ஒன்றில் இடம்பெற்ற வெடிவிபத்தில் 73 பேர் கொல்லப்பட்டும் 400 பேர் காயமும் அடைந்தனர்.
1920 – அமெரிக்க மேலவை உலக நாடுகள் சங்கத்தில் சேறுவதிற்கு எதிர்ப்பாக தீர்மானம் நிறைவேற்றியது.
1927 – பிரித்தானியா சீனாவுக்கு படைகளை அனுப்பியது.
1937 – ஹோவார்ட் ஹியூஸ் லாஸ் ஏஞ்சலஸ் இலிருந்து நியூ யார்க் நகரத்திற்கு 7 மணிநேரம், 28 நிமிடங்கள், 25 நொடிகளில் பறந்து சாதனைப் புரிந்தார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியப் படைகள் இத்தாலி வசமிருந்த எரித்திரியாவைத் தாக்கினர்.
1942 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பர்மாவை முற்றுகையிட்டனர்.
1949 – கூபா இசுரேலை கண்டுகொண்டது.
1966 – இந்திரா காந்தி இந்தியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1981 – ஈரானில் 14 மாதங்களுக்கு முன்னர் பணயக் கைதிகளாகப் பிடிக்கப்பட்ட 52 அமெரிக்கர்களை விடுவிக்க ஐக்கிய அமெரிக்காவும் ஈரானும் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர்.
1983 – நாசி போர்க் குற்றவாளி கிளவுஸ் பார்பி பொலிவியாவில் கைது செய்யப்பட்டான்.
1986 – முதற் கணினி நச்சுநிரலான பிரெயின் ((c)Brain) பரவத் தொடங்கியது.
1993 – வேதி ஆயுத உடன்படிக்கை (CWC) கையொப்பமிடப்பட்டது.
1993 – ஐபிஎம் நிறுவனம் 1992 ஆண்டிற்கான அறிக்கையில் $4.97 பில்லியன் நட்டத்தை அறிவித்தது, இன்றுவரையில் அமெரிக்காவில் வேறொரு நிறுவனம் இந்த அளவில் நட்டம் அடைந்ததில்லை.
1997 – 30 ஆண்டுகளுக்குப் பின்னர் யாசர் அரபாத் ஹெப்ரோன் திரும்பினார்.
2006 – சிலவாக்கியாவின் விமானப்படை விமானம் ஹங்கேரியில் வீழ்ந்து நொருங்கியது.
2006 – புளூட்டோவுக்கான முதலாவது நியூ ஹரைசன்ஸ் என்ற விண்ணுளவியை நாசா விண்ணுக்கு ஏவியது.
2007 – இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த வாகரையைத் தாம் கைப்பற்றிவிட்டதாக இலங்கை இராணுவம் அறிவித்தது.

பிறப்புகள்

1736 – ஜேம்ஸ் உவாட், கண்டுபிடிப்பாளர் (இ. 1819)
1807 – ராபர்ட் ஈ. லீ, அமெரிக்கப் பொறியியலாளர் (இ. 1870)
1809 – எட்கார் அலன் போ, அமெரிக்க எழுத்தாளர், கவிஞர் (இ. 1849)
1839 – பால் செசான், பிரெஞ்சு ஓவியர் (இ. 1906)
1912 – லியோனிட் கண்டரோவிச், நோபல் பரிசு பெற்ற இரசியப் பொருளியலாளர் (இ. 1986)
1933 – சீர்காழி எஸ். கோவிந்தராஜன், கருநாடக, திரையிசைப் பாடகர் (இ. 1988)
1948 – வானம்பாடி யோகராஜ், ஈழத்து வில்லிசைக் கலைஞர் (இ. 1999)

இறப்புகள்

1597 – மகாராணா பிரதாப், இந்திய மன்னர் (பி. 1540)
1990 – ஓஷோ, இந்திய ஆன்மிகவாதி (பி. 1931)
2014 – ஸ்டான்லி ஜெயராஜா தம்பையா, ஈழத்து மானிடவியலாளர், பேராசிரியர் (பி. 1929)
2015 – ரஜினி கோத்தாரி, அரசியல் அறிஞர் (பி. 1928)

164 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.