வரலாற்றில் இன்று – 19.12.2024
வரலாற்றில் இன்று – 19.12.2024

டிசெம்பர் 19 (December 19) கிரிகோரியன் ஆண்டின் 353 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 354 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 12 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம்

நிகழ்வுகள்

324 – லிசீனியசு உரோமைப் பேரரசர் பதவியைத் துறந்தார்.
1154 – இங்கிலாந்தின் இரண்டாம் என்றி முடிசூடினார்.
1187 – மூன்றாம் கிளெமெண்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1606 – ஐக்கிய அமெரிக்காவின் 13 குடியேற்ற நாடுகளில் முதலாவதான வர்ஜீனியாவின் யேம்சுடவுன் நகரில் இங்கிலாந்தில் இருந்து மூன்று கப்பல்களில் ஆங்கிலேயர்கள் வந்திறங்கினர்.
1796 – பிரெஞ்சுப் புரட்சிப் போர்கள்: ஒராசியோ நெல்சன் தலைமையில் இரண்டு பிரித்தானியப் படைப்பிரிவுகள் இன்றைய எசுப்பானியாவின் மூரிசியா நகரில் எசுப்பானியப் படைகளுடன் போரில் ஈடுபட்டன.
1852 – இரண்டாம் ஆங்கிலேய-பர்மியப் போர்: பிரித்தானியர் பர்மாவின் பெகு பிராந்தியத்தைக் கைப்பற்றினர்.[1]
1871 – யாழ்ப்பாணத்தில் முதல் தடவையாக கத்தோலிக்க மதகுருப் பதவிகள் வழங்கப்பட்டன.[2]
1877 – யாழ்ப்பாணம், நெடுந்தீவில் வாந்திபேதி, மற்றும் சின்னம்மை நோய் பரவியதில் பலர் இறந்தனர்.[2]
1879 – நியூசிலாந்தில் ஆண்கள் அனைவருக்கும் வாக்குரிமை வழங்கப்பட்டது.
1907 – அமெரிக்காவில் பென்சில்வேனியாவில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 239 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
1916 – முதலாம் உலகப் போர்: பிரான்சில் வேர்டன் என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் செருமனியப் படைகளை பிரெஞ்சுப் படைகள் தோற்கடித்தன.
1920 – முதலாம் கான்சுடண்டைன் கிரேக்கத்தின் மன்னராக முடிசூடினார்.
1927 – கக்கோரி தொடருந்துக் கொள்ளையில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்பட்ட ராம் பிரசாத் பிசுமில், அஷ்பகுல்லா கான், ரொசான் சிங் ஆகிய விடுதலைப் போராளிகள் பிரித்தானிய இந்திய அரசினால் தூக்கிலிடப்பட்டனர்.
1929 – இந்திய தேசிய காங்கிரசு இந்தியாவின் விடுதலையை அறிவித்தது.
1932 – பிபிசி உலக சேவை ஆரம்பமானது.
1941 – இரண்டாம் உலகப் போர்: இட்லர் தன்னை செருமனியின் இராணுவத் தலைவராகத் தன்னை அறிவித்தார்.
1946 – முதலாவது இந்தோசீனப் போர் ஆரம்பமானது.
1961 – போர்த்துக்கேயக் குடியேற்ற நாடான தமன் தியூ பகுதியை இந்தியா தன்னுடன் இணைத்துக்கொண்டது.
1967 – இரு நாட்களின் முன்னர் கடலில் நீந்தும்போது காணாமல் போன ஆத்திரேலியப் பிரதமர் அரல்ட் ஓல்ட் இறந்து விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
1972 – அப்பல்லோ திட்டம்: சந்திரனுக்கு கடைசித் தடவையாக மனிதரை ஏற்றிச் சென்ற அப்பல்லோ 17 பாதுகாப்பாக பூமி திரும்பியது.
1983 – உலகக்கோப்பை காற்பந்துப் போட்டியில் வழங்கப்படும் பரிசுக்கிண்ணம் பிரேசிலில் அந்நாட்டு காற்பந்தாட்ட அமைப்பின் தலைமையகத்தில் வைத்துத் திருடப்பட்டது.
1984 – ஆங்காங்கின் ஆட்சியை 1997 சூலை 1 இல் சீனாவிடம் மீண்டும் ஒப்படைக்கும் ஒப்பந்தம் சீனத் தலைவர் டங் சியாவுபிங், பிரித்தானியப் பிரதமர் மார்கரெட் தாட்சர் ஆகியோருக்கிடையில் கையெழுத்திடப்பட்டது.
1986 – சோவியத் எதிர்ப்பாளி ஆந்திரே சாகரவ் அவரது கோர்க்கி வீட்டுக்காவலில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1997 – சில்க் ஏர் விமானம் இந்தோனேசியாவில் பலெம்பாங் அருகே மூசி ஆற்றில் வீழ்ந்ததில் 104 பேர் உயிரிழந்தனர்.
1998 – அமெரிக்க அரசுத்தலைவர் பில் கிளின்டன் மீது கீழவையில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2001 – அதியுயர் வளிமண்டல அழுத்தம் (1085.6 hPa) மங்கோலியாவில் பதிவு செய்யப்பட்டது.
2013 – கையா விண்கலத்தை ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் ஏவியது.
2016 – துருக்கிக்கான உருசியத் தூதர் அதிரேய் கார்லொவ் அங்காராவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

பிறப்புகள்

1683 – எசுப்பானியாவின் ஐந்தாம் பிலிப்பு (இ. 1746)
1852 – ஆல்பர்ட் ஆபிரகாம் மைக்கல்சன், நோபல் பரிசு பெற்ற புரூசிய-அமெரிக்க இயற்பியலாளர் (இ. 1931)
1901 – ருடால்ப் ஹெல், செருமானியப் பொறியியலாளர் (இ. 2002)
1904 – பி. டி. ரணதிவே, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (இ. 1990)
1906 – லியோனிட் பிரெஷ்னெவ், சோவியத் ஒன்றியத்தின் 4வது அரசுத்தலைவர் (இ. 1982)
1915 – எடித் பியாஃப், பிரான்சியப் பாடகி, நடிகை (இ. 1963)
1922 – கே. அன்பழகன், தமிழக அரசியல்வாதி
1933 – அ. விநாயகமூர்த்தி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி
1934 – பிரதிபா பாட்டில், 12வது இந்தியக் குடியரசுத் தலைவர்
1936 – சண்முகம் சிவலிங்கம், ஈழத்துக் கவிஞர் (இ. 2012)
1943 – அ. இராமசாமி, தமிழக வரலாற்றாசிரியர், நூலாசிரியர்
1951 – ஆல்வின் ரோத், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர்
1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
1974 – ரிக்கி பாண்டிங், ஆத்திரேலியத் துடுப்பாளர்
1980 – ஜேக் கிலென்ஹால், அமெரிக்க நடிகர்
1982 – பாலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1987 – கரீம் பென்சிமா, பிரான்சியக் காற்பந்து வீரர்
1988 – அலெக்சிசு சான்சேசு, சிலியக் காற்பந்து வீரர்

இறப்புகள்

401 – முதலாம் அனஸ்தாசியுஸ் (திருத்தந்தை)
1111 – அல் கசாலி, ஈரானிய மெய்யியலாளர் (பி. 1058)
1370 – ஐந்தாம் அர்பன் (திருத்தந்தை) (பி. 1310)
1741 – விட்டஸ் பெரிங், தென்மார்க்கு-உருசிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (பி. 1681)
1848 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1818)
1860 – டல்ஹவுசி பிரபு, பிரித்தானிய இந்திய நிர்வாகி (பி. 1812)
1898 – பிரான்சிஸ் நேப்பியர், சென்னை மாகாண பிரித்தானிய ஆளுநர் (பி. 1819)
1915 – அலாய்ஸ் அல்சீமர், செருமானிய உளவியல் நிபுணர் (பி. 1864)
1927 – அஷ்பகுல்லா கான், இந்திய செயற்பாட்டாளர் (பி. 1900)
1927 – ராம் பிரசாத் பிசுமில், இந்தியக் கவிஞர் (பி. 1897)
1953 – இராபர்ட் ஆண்ட்ரூஸ் மில்லிகன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க இயற்பியலாளர் (பி. 1868)
1994 – கி. ஆ. பெ. விசுவநாதம், தமிழ் உணர்வாளர், தமிழறிஞர் (பி. 1899)
2013 – டேவிட் ராஜேந்திரன், ஈழத்து வானொலி, மேடை நாடகக் கலைஞர் (பி. 1945)
2014 – எஸ். பாலசுப்பிரமணியன், தமிழக பத்திரிகையாளர், திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குநர் (பி. 1936)

சிறப்பு நாள்

விடுதலை நாள் (கோவா)

125 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.