வரலாற்றில் இன்று – 20.12.2024
வரலாற்றில் இன்று – 20.12.2024

டிசெம்பர் 20 (December 20) கிரிகோரியன் ஆண்டின் 354 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 355 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 11 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம்

நிகழ்வுகள்

69 – நீரோ மன்னனின் முன்னாள் தளபதியாக இருந்த வெசுப்பாசியான் உரோமைப் பேரரசனாகத் தன்னை அறிவிக்கும் பொருட்டு உரோம் நகரை அடைந்தான்.
217 – முதலாம் கலிஸ்டசு 16-வது திருத்தந்தையாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் உடனடியாகவே இப்போலிட்டசு எதிர்-திருத்தந்தையாக அறிவிக்கப்பட்டார்.
1192 – மூன்றாம் சிலுவைப் போரை முடிவுக்குக் கொண்டு வந்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டு விட்டு இங்கிலாந்து திரும்பும் வழியில் முதலாம் ரிச்சார்ட் ஆஸ்திரியாவின் இளவரசன் ஐந்தாம் லியோபோல்டினால் கைது செய்யப்பட்டான்.
1334 – பன்னிரண்டாம் பெனடிக்ட்டு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1606 – வேர்ஜீனியா கம்பனியின் மூன்று கப்பல்கள் ஆங்கிலேயர்களை ஏற்றிக் கொண்டு வேர்ஜீனியாவின் ஜேம்ஸ்டவுனை நோக்கிக் கிளம்பியது. இதுவே அமெரிக்காக்களில் இடம்பெற்ற முதலாவது நிரந்தர ஆங்கிலக் குடியேற்றத் திட்டமாகும்.
1803 – பிரெஞ்சுகளிடம் இருந்து லூசியானா விலைக்கு வாங்கப்பட்டதைக் குறிக்க நியூ ஓர்லென்ஸ் நகரில் பெரும் கொண்டாட்டங்கள் இடம்பெற்றன.
1808 – இலண்டனில் கோவெண்ட் பூங்கா நாடக அரங்கு தீக்கிரையானது.
1832 – போக்லாந்து தீவுகளைக் கைப்பற்றும் பொருட்டு கப்டன் ஓன்சுலோ தலைமையில் பிரித்தானியப் படைக்கப்பல் எமொண்ட் துறைமுகத்தை வந்தடைந்தது.
1844 – இலங்கையில் அடிமை முறையை முற்றாக ஒழிக்கும் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.[1]
1860 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: தெற்கு கரொலைனா ஐக்கிய அமெரிக்காவில் இருந்து வெளியேறிய முதலாவது மாநிலமானது.
1915 – முதலாம் உலகப் போர்: கடைசி ஆத்திரேலியப் படையினர் கலிப்பொலியில் இருந்து வெளியேறினர்.
1917 – சோவியத் ஒன்றியத்தின் முதலாவது இரகசியக் காவற்துறை “சேக்கா” அமைக்கப்பட்டது.
1924 – இட்லர் லான்ட்சுபெர்கு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
1941 – இரண்டாம் உலகப் போர்: அமெரிக்கத் தன்னார்வப் படை “பறக்கும் புலிகள்” சீனாவில் குன்மிங் நகரில் முதலாவது சமரை நிகழ்த்தியது.
1942 – இரண்டாம் உலகப் போர்: கல்கத்தா சப்பானியர்களின் வான் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளானது.
1943 – பொலிவியாவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1948 – புதிதாக உருவாக்கப்பட்ட இந்தோனேசியக் குடியரசின் தற்காலிகத் தலைநகர் யோக்யகர்த்தாவை இடச்சுப் படைகள் கைப்பற்றின.
1951 – அணுவாற்றலினாலான மின்சாரம் முதற்தடவையாக அமெரிக்காவில் ஐடஹோ மாநிலத்தில் பிறப்பிக்கப்பட்டது. இது நான்கு மின்குமிழ்களை எரிக்கப் பயன்பட்டது.
1952 – ஐக்கிய அமெரிக்க வான்படை விமானம் வாசிங்டனில் மோதி வெடித்ததில் 87 பேர் உயிரிழந்தனர்.
1955 – கார்டிஃப் வேல்சின் தலைநகரமாக அறிவிக்கப்பட்டது.
1957 – போயிங் 707 விமானம் தனது முதலாவது பயணத்தை மேற்கொண்டது.
1971 – எல்லைகளற்ற மருத்துவர்கள் என்ற தன்னார்வ அமைப்பு பாரிசு நகரில் தொடங்கப்பட்டது.
1973 – எசுப்பானியப் பிரதமர் “லூயிஸ் கரேரோ பிளாங்கோ” மத்ரித் நகரில் வாகனக் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டார்.
1984 – இங்கிலாந்தில் பெனைன்சு மலைத்தொடர் சுரங்கத் தொடருந்துப் பாதையில் 1 மில்லியன் பெற்றோலியப் பொருட்களை ஏற்றிச் சென்ற சரக்கு தொடருந்து ஒன்று தடம் புரண்டு தீ பரவியதில் பலத்த சேதம் ஏற்பட்டது.
1985 – திருத்தந்தை இரண்டாம் அருள் சின்னப்பர் உலக இளையோர் நாளை ஆரம்பித்து வைத்தார்.
1987 – பிலிப்பீன்சில் பயணிகள் கப்பல் ஒன்று எண்ணெய்த் தாங்கிக் கப்பலுடன் மோதி மூழ்கியதில் 4,000 (அதிகாரபூர்வமாக 1,749) பேர் உயிரிழந்தனர்.
1988 – போதைப்பொருள் கடத்தலுக்கெதிரான ஐநா சாசனம் வியென்னாவில் கையெழுத்திடப்பட்டது.
1989 – பனாமாவின் அரசுத்தலைவர் மனுவேல் நொரியேகாவைப் பதவிலிருந்து அகற்ற ஐக்கிய அமெரிக்கா தனது படைகளை பனாமாவுக்கு அனுப்பியது.
1995 – நேட்டோ பொசுனியாவில் அமைதி காக்கும் பணியைத் தொடங்கியது.
1995 – அமெரிக்க போயிங் விமானம் ஒன்று கொலம்பியாவில் மலை ஒன்றுடன் மோதியதில் 159 பேர் உயிரிழந்தனர்.
1999 – மக்காவு போர்த்துகலிடம் இருந்து சீனாவிடம் கைமாறியது.
2000 – மிருசுவில் படுகொலைகள்: யாழ்ப்பாணம் மிருசுவில் பகுதியில் 3 வயதுக் குழந்தை உட்பட 8 பொதுமக்கள் இலங்கை இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
2004 – வட அயர்லாந்து பெல்பாஸ்ட் நகரில் உள்ள வங்கி ஒன்றில் இருந்து £26.5 மில்லியன் பணம் கொள்ளையிடப்பட்டது.
2007 – இரண்டாம் எலிசபெத் அதிக காலம் ஐக்கிய இராச்சியத்தின் ஆட்சியாளராக இருந்த பெருமையைப் பெற்றார்.

பிறப்புகள்

1876 – வால்ட்டர் சிட்னி ஆடம்சு, அமெரிக்க வானியியலாளர் (இ. 1956)
1886 – அ. வேங்கடாசலம் பிள்ளை, தமிழகத் தமிழறிஞர் (இ. 1953)
1901 – ராபர்ட் ஜெ. வான் டி கிராப், அமெரிக்க இயற்பியலாளர், வான் டி கிராப் நிலை மின்னியற்றியைக் கண்டுபிடித்தவர் (இ. 1967)
1920 – கனகசபை சிவகுருநாதன், இலங்கை எழுத்தாளர், சமூக சேவையாளர் (இ. 2003)
1923 – அ. சிவானந்தன், இலங்கைத் தமிழ் ஆங்கில எழுத்தாளர், சமூக, அரசியல் செயற்பாட்டாளர் (இ. 2018)
1937 – வேலா அரசமாணிக்கம், தமிழ்ப் பேச்சாளர், இதழாசிரியர் (இ. 1991)
1940 – யாமினி கிருஷ்ணமூர்த்தி, பரதநாட்டிய, குச்சிப்புடி நடனக் கலைஞர்
1941 – பா. ரா. சுப்பிரமணியன், தமிழக எழுத்தாளர், தமிழறிஞர்
1949 – ராஜேஷ், தமிழ்த் திரைப்பட நடிகர்
1960 – எஸ். ஜி. சாந்தன், ஈழத்து மெல்லிசைப் பாடகர், நாடகக் கலைஞர் (இ. 2017)
1976 – யுகேந்திரன், தமிழ்த் திரைப்படப் பின்னணிப் பாடகர், நடிகர்
1987 – பார்வதி ஓமனகுட்டன், இந்திய, மலையாள நடிகை
1994 – ஹரிணி ரவி, பின்னணிப் பாடகி, பின்னணிக் குரல் வழங்குனர்

இறப்புகள்

217 – செஃபிரீனுஸ் (திருத்தந்தை)
1921 – ஜூலியஸ் ரிச்சர்டு பெட்ரி, செருமானிய நுண்ணுயிரியலாளர் (பி. 1852)
1969 – ஆர். எஸ். சுபலட்சுமி, பெண்ணியவாதி, சமூக சீர்திருத்தவாதி (பி. 1886)
1993 – வில்லியம் எட்வர்ட்சு டெமிங், அமெரிக்க புள்ளிவிபரவியலாளர், நூலாசிரியர் (பி. 1900)
1994 – சிறில் பொன்னம்பெரும, இலங்கை அறிவியலாளர் (பி. 1923)
1996 – கார்ல் சேகன், அமெரிக்க வானியற்பியலாளர், அண்டவியலாளர் (பி. 1934)
2002 – குரோட் இரெபெர், ஆத்திரேலிய-அமெரிக்க கதிர்வீச்சு வானியலாளர் (பி. 1911)
2010 – கா. பொ. இரத்தினம், இலங்கைத் தமிழ்க் கல்வியாளர், அரசியல்வாதி (பி. 1914)
2019 – டி. செல்வராஜ், தமிழக எழுத்தாளர் (பி. 1938)

சிறப்பு நாள்

அடிமை ஒழிப்பு நாள் (ரீயூனியன், பிரெஞ்சு கயானா)

137 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.