வரலாற்றில் இன்று – 22.12.2024
வரலாற்றில் இன்று – 22.12.2024

டிசம்பர் 22 (December 22) கிரிகோரியன் ஆண்டின் 356 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 357 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஒன்பது நாட்கள் உள்ளன
பொருளடக்கம்

நிகழ்வுகள்

69 – பேரரசர் விட்டேலியசு ரோம் நகரில் படுகொலை செய்யப்பட்டார்.
401 – முதலாம் இன்னசெண்ட் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
856 – பாரசீகத்தில் டம்கான் நகரில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 200,000 பேர் வரை உயிரிழந்தனர்.
880 – தாங் சீனாவின் கிழக்குத் தலைநகர் இலுவோயங் கிளர்ச்சித் தலைவர் உவாங் சாவோவினால் கைப்பற்றப்பட்டது.
1135 – இசுட்டீவன் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1216 – தொமினிக்கன் சபையை திருத்தந்தை மூன்றாம் ஒனோரியசு அங்கீகரித்தார்.
1769 – சீன-பர்மியப் போர் (1765–69) முடிவுக்கு வந்தது.
1790 – துருக்கியின் இசுமாயில் நகரை உருசியாவின் அலெக்சாந்தர் சுவோரவ் தலைமையிலான படையினர் கைப்பற்றினர்.
1807 – வெளிநாடுகளுடனான வணிகத் தொடர்புகளை நிறுத்தும் சட்டமூலம் அரசுத்தலைவர் ஜெபர்சனின் கோரிக்கைப் படி அமெரிக்க சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.
1845 – பஞ்சாபில் ஃபெரோசிஷா என்ற இடத்தில் இடம்பெற்ற போரில் பிரித்தானியப் படைகள் சீக்கியர்களைத் தோற்கடித்தனர்.
1849 – உருசிய எழுத்தாளர் பியோதர் தஸ்தயெவ்ஸ்கியின் மரணதண்டனை கடைசி நேரத்தில் ரத்துச் செய்யப்பட்டது.
1851 – இந்தியாவின் முதலாவது சரக்குத் தொடருந்து உத்தராஞ்சல் மாநிலத்தில் ரூர்க்கி நகரத்தில் ஓடவிடப்பட்டது.
1869 – எடின்பரோ கோமகன் இளவரசர் அல்பிரட் கல்கத்தா வந்தார்.[1]
1885 – இட்டோ இரோபுமி என்ற சாமுராய் சப்பானின் முதலாவது பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1891 – புகைப்படம் மூலம் முதன் முதலாக ‘323 புரூசியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது.
1915 – மலேசிய இலங்கைத் தமிழரால் வாங்கப்பட்ட யாழ்ப்பாணம் என்ற விமானம் பிரித்தானிய வான்படைக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டது.
1921 – சாந்திநிகேதன் கல்வி நிலையம் ஆரம்பமானது.
1942 – இரண்டாம் உலகப் போர்: போரில் பாவிப்பதற்கென வி-2 ஏவுகணைகளை உற்பத்தி செய்ய இட்லர் உத்தரவிட்டார்.
1944 – இரண்டாம் உலகப் போர்: இந்தோசீனாவில் சப்பானிய ஆக்கிரமிப்புக்கெதிராக வியட்நாம் மக்கள் இராணுவம் அமைக்கப்பட்டது.
1948 – சாஃப்ருதீன் பிரவிரனேகரா மேற்கு சுமாத்திராவில் இந்தோனேசியக் குடியரசின் இடைக்கால அரசை அறிவித்தார்.
1963 – லக்கோனியா என்ற இடச்சுக் கப்பல் போர்த்துக்கலில் மதீராவில் மூழ்கியதில் 128 பேர் உயிரிழந்தனர்.
1964 – தனுஷ்கோடி புயல், 1964: தமிழ்நாடு, தனுஷ்கோடி, மற்றும் இலங்கையின் வடக்குப் பகுதியையும் புயல் தாக்கியதில், 1,800 இற்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.
1974 – பிரான்சிடம் இருந்து பிரிந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்து கொமொரோசு மக்கள் வாக்களித்தனர். மயோட்டே பிரெஞ்சு நிருவாகத்தில் தொடர்ந்து இயங்க வாக்களித்தது.
1978 – மாவோ-கால இறுகிய கொள்கைகளைத் துறந்து திறந்த சந்தைக் கொள்கைகளை சீனப் பொதுவுடமைக் கட்சித் தலைவர் டங் சியாவுபிங் அறிமுகப்படுத்தினார்.
1978 – இலங்கையில் அப்போதைய நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை மேலும் ஆறாண்டுகளுக்கு நீடிப்பதற்காக நடத்தப்பட்ட தேசிய வாக்கெடுப்பில் 54.66% மக்கள் ஆதரவாக வாக்களித்தனர்.
1989 – உருமேனியாவின் கம்யூனிச அரசுத்தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. இயோன் இலியெசுக்கு ஆட்சியைக் கைப்பற்றினார்.
1989 – கிழக்கு செருமனியையும் மேற்கு செருமனியையும் பெர்லினில் பிரித்த பிரான்டென்போர்க் வாயில் 30 ஆண்டுகளின் பின்னர் திறந்து விடப்பட்டது.
1990 – லேக் வலேசா போலந்தின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1990 – மார்சல் தீவுகள், மைக்குரோனீசியா கூட்டு நாடுகள் ஆகியன பொறுப்பாட்சி மன்றத்திடம் இருந்து விடுதலையடைந்தன.
2001 – வடக்குக் கூட்டணியின் தலைவர் புர்கானுத்தீன் ரப்பானி ஆப்கானித்தானின் ஆட்சியை ஹமித் கர்சாய் தலைமையிலான இடைக்கால அரசிடம் கையளித்தார்.
2018 – இந்தோனேசியாவில் சுண்டா நீரிணை ஆழிப்பேரலை ஏற்பட்டதில் 430 பேர் வரை உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1183 – சகதை கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1242)
1300 – குதுக்து கான், மங்கோலியப் பேரரசர் (இ. 1329)
1666 – குரு கோவிந்த் சிங், சீக்கிய குரு, கவிஞர் (இ. 1708)
1853 – சாரதா தேவி, இந்திய ஆன்மிகவாதி, மெய்யியலாளர் (இ. 1920)
1858 – ஜாக்கோமோ புச்சீனி, இத்தாலிய இசையமைப்பாளர் (இ. 1924)
1887 – சீனிவாச இராமானுசன், இந்தியக் கணிதவியலாளர் (இ. 1920)
1885 – கிரிகொரி நிகோலயேவிச் நியூய்மின், உருசிய வானியலாளர் (இ. [1946]])
1892 – எர்மன் போட்டோச்னிக், குரோவாசிய-ஆத்திரியப் பொறியாளர் (இ. 1929)
1911 – குரோட் இரெபெர், கதிர்வீச்சு வானியலாளர் (இ. 2002)
1929 – சிலம்பொலி செல்லப்பன், தமிழக எழுத்தாளர் (இ. 2019)
1933 – சாலினி இளந்திரையன், தமிழறிஞர், எழுத்தாளார், இதழாளர், அரசியற் செயற்பாட்டாளர் (இ. 2000
1955 – தாமஸ் சி. சுதோப், நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர்
1958 – ஜெயமாலினி, தென்னிந்தியத் திரைப்பட நடிகை

இறப்புகள்

1419 – எதிர்-திருத்தந்தை இருபத்திமூன்றாம் யோவான்
1936 – நிக்கோலாய் ஒஸ்திரோவ்ஸ்க்கி, சோவியத் உருசிய எழுத்தாளர் (பி. 1904)
1942 – பிராண்ஸ் போவாஸ், செருமனிய-அமெரிக்க மொழியியலாளர் (பி. 1858)
1988 – சிகோ மெண்டிஸ், பிரேசில் தொழிற்சங்கத் தலைவர், செயற்பாட்டாளர் (பி. 1944)
2006 – வி. நவரத்தினம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1910)
2008 – லன்சானா கொண்டே, கினியின் அரசுத் தலைவர் (பி. 1934)
2014 – ஜக்தேவ் சிங் ஜசோவால், பஞ்சாப் நூலாசிரியர், இலக்கியவாதி (பி. 1935)

சிறப்பு நாள்

அன்னையர் நாள் (இந்தோனேசியா)
தேசிய கணித தினம் (இந்தியா)
ஆசிரியர் நாள் (கியூபா)

163 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.