வரலாற்றில் இன்று – 25.12.2024
வரலாற்றில் இன்று – 25.12.2024

டிசெம்பர் 25 (December 25) கிரிகோரியன் ஆண்டின் 359 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 360 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் ஆறு நாட்கள் உள்ளன
பொருளடக்கம்

நிகழ்வுகள்

274 – சூரியனுக்கான கோவில் உரோமை நகரில் அமைக்கப்பட்டது.
336 – உரோமை நகரில் நத்தார் முதன் முதலில் கொண்டாடப்பட்டதாக அறியப்படுகிறது.
508 – பிராங்குகளின் மன்னர் முதலாம் குளோவிசு கத்தோலிக்கராகத் திருமுழுக்குப் பெற்றார்.
800 – சார்லமேன் புனித உரோமைப் பேரரசனாக முடிசூடினான்.
1000 – அங்கேரிப் பேரரசு முதலாம் இசுடீவனின் கீழ் கிறித்தவ நாடானது.
1066 – நோர்மண்டி இளவரசர் முதலாம் வில்லியம் இங்கிலாந்தின் மன்னராக முடிசூடினார்.
1100 – முதலாம் பால்டுவின் எருசலேமின் முதலாவது மன்னராக பெத்லகேம், பிறப்பிடத் தேவாலயத்தில் முடிசூடினார்.
1492 – கொலம்பசின் சாண்டா மரியா கப்பல் எயிட்டி அருகே பவளப் படிப்பாறையில் மோதியது.
1559 – நான்காம் பயசு திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1643 – கிறித்துமசு தீவு கண்டுபிடிக்கப்பட்டது. பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியின் ரோயல் மேரி கப்பலின் தலைவன் வில்லியம் மைநோர்ஸ் என்பவரால் இத்தீவுக்கு கிறித்துமசுத் தீவு எனப் பெயரிடப்பட்டது.
1741 – ஆன்டர்சு செல்சியசு தனது செல்சியசு வெப்பமானியைக் கண்டுபிடித்தார்.
1758 – ஹேலியின் வால்வெள்ளி ஜொகான் பாலிட்ச் என்னும் செருமனியரால் அவதானிக்கப்பட்டது. இதன் மூலம் எட்மண்டு ஏலியின் எதிர்வுகூறல் நிறுவப்பட்டது.
1776 – சியார்ச் வாசிங்டன் அமெரிக்க விடுதலைப் படையுடன் இரவோடிரவாக டெலவேர் ஆற்றைக் கடந்து டிரெண்டனில் பிரித்தானியப் படைகளுடன் போரில் ஈடுபட சென்றார்.
1831 – ஜமேக்காவில் அடிமைகள் விடுதலை வேண்டி கிளர்ச்சியில் ஈடுபட்டனர்.
1868 – அமெரிக்க உள்நாட்டுப் போரில் ஈடுபட்ட அனைத்து கூட்டமைப்புப் படைவீரர்களுக்கும் பொது மன்னிப்பை அமெரிக்க அரசுத்தலைவர் ஆன்ட்ரூ ஜோன்சன் அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனிக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் கிறித்துமசு நாள் போர்நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது.
1932 – சீனாவின் கான்சு நகரில் 7.6 நிலநடுக்கம் ஏற்பட்டதில் 275 பேர் இறந்தனர்.
1941 – இரண்டாம் உலகப் போர்: ஆங்காங் மீதான சப்பானின் முற்றுகை ஆரம்பமாயிற்று.
1947 – சீனக் குடியரசின் அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தது.
1962 – சோவியத் ஒன்றியம் கடைசித் தடவையாக நிலத்திற்கு மேலான அணுவாயுத சோதனையை மேற்கொண்டது.
1968 – கீழ்வெண்மணிப் படுகொலைகள்: கூலி அதிகம் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட 44 தலித் மக்கள் தமிழ்நாட்டில் கீழவெண்மணி கிராமத்தில் உயிருடன் தீயிட்டு படுகொலை செய்யப்பட்டனர்.
1976 – எகிப்திய விமானம் பேங்காக் நகரில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 52 பேரும், தரையில் 19 பேரும் உயிரிழந்தனர்.
1977 – இசுரேல் பிரதமர் பெகின் எகிப்திய அதிபர் அன்வர் சதாத்தை சந்தித்தார்.
1979 – சோவியத் ஒன்றியம் ஆப்கானித்தானில் தனது படைகளை பெருமளவில் இறக்கியது.
1989 – உருமேனியாவின் முன்னாள் கம்யூனிசத் தலைவர் நிக்கொலாய் செய்செஸ்குவுக்கும் அவரது மனைவிக்கும் மரணதண்டனை விதிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டனர்.
1990 – உலகளாவிய வலைத் திட்டம் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டது.
1991 – சோவியத் தலைவர் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பச்சோவ் விலகினார். அடுத்த நாள் சோவியத் ஒன்றியம் கலைக்கப்பட்டது.
1991 – உக்ரைன் சோவியத் ஒன்றியத்தில் இருந்து விலகியது.
2003 – பெனின் விமான நிலையத்தில் போயிங் 727 விமானம் வீழ்ந்ததில் 151 பேர் உயிரிழந்தனர்.
2003 – மார்ஸ் எக்ஸ்பிரஸ் விண்கலத்தில் இருந்து டிசம்பர் 19 இல் ஏவப்பட்ட பீகில் 2 விண்கலம் செவ்வாய்க் கோளில் தரையிறங்குவதற்கு சற்று முன்னர் காணாமல் போனது.
2004 – காசினி விண்கப்பலில் இருந்து சனிக் கோளின் டைட்டன் துணைக்கோளில் இறக்குவதற்காக இயூஜென்சு என்ற சேய்க்கலம் விடுவிக்கப்பட்டது. இது 2005 சனவரி 14-இல் டைட்டானில் இறங்கியது.
2005 – இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் யோசப் பரராஜசிங்கம் அதிகாலை 12:15 மணியளவில் மட்டக்களப்பு புனித மரியாள் பேராலயத்தில் நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த போது துணை இராணுவக் குழுவைச் சேர்ந்த ஒருவனால் சுட்டு கொல்லப்பட்டார்.
2012 – கசக்ஸ்தானில் அண்டோனொவ் விமானம் ஒன்று வீழ்ந்ததில் 27 பேர் உயிரிழந்தனர்.
2016 – உருசிய பாதுகாப்பு அமைச்சின் விமானம் ஒன்று கருங்கடலில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த அனைத்து 92 பேரும் உயிரிழந்தனர்.

பிறப்புகள்

1642 (யூநா) – ஐசாக் நியூட்டன், ஆங்கிலேய இயற்பியலாளர், கணிதவியலாளர் (இ. 1726/1727)
1724 – ஜான் மிச்சல், ஆங்கிலேய மெய்யியலாளர், கருந்துளையை எதிர்வு கூறியவர் (இ. 1793)
1861 – மதன் மோகன் மாளவியா, இந்திய அரசியல்வாதி (இ. 1946)
1876 – அடால்ஃப் வின்டாஸ், நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (இ. 1959)
1876 – முகம்மது அலி ஜின்னா, பாக்கித்தானின் 1வது ஆளுநர் (இ. 1948)
1899 – ஹம்பிறி போகார்ட், அமெரிக்க நடிகர் (இ. 1957)
1905 – டி. கே. இராமானுஜக் கவிராயர், வைணவப் புலவர், தமிழறிஞர் (இ. 1985)
1906 – ஏர்ணஸ்ட் ருஸ்கா, நோபல் பரிசு எப்ற்ற செருமானிய இயற்பியலாளர் (இ. 1988)
1918 – அன்வர் சாதாத், எகிப்தின் 3வது அரசுத்தலைவர், அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1981)
1924 – அடல் பிகாரி வாச்பாய், 10வது இந்தியப் பிரதமர் (இ. 2018)
1927 – ராம் நாராயண், இந்துத்தானி இசைக்கலைஞர்
1942 – என்ரீக்கே மொறேந்தே, எசுப்பானியப் பாடகர் (இ. 2010)
1949 – நவாஸ் ஷெரீப், பாக்கித்தானின் 12வது பிரதமர்
1956 – பிரபு, தமிழ்த் திரைப்பட நடிகர், தயாரிப்பாளர்
1960 – நோயெல் இம்மானுவேல், இலங்கைத் தமிழ் கத்தோலிக்க மதகுரு, ஆயர்
1971 – ஜஸ்டின் துரூடோ, கனடாவின் 23வது பிரதமர்
1974 – நக்மா, இந்திய நடிகை

இறப்புகள்

1796 – வேலு நாச்சியார், ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதம் ஏந்திப் போராடிய முதல் பெண் போராளி (பி. 1730)
1921 – விளாதிமிர் கொரலென்கோ, உருசிய ஊடகவியலாளர், எழுத்தாளர், செய்ற்பாட்டாளர் (பி. 1853)
1931 – பா. வே. மாணிக்க நாயக்கர், அறிவியல் தமிழ் வளர்த்த தமிழிஞர் (பி. 1871)
1961 – ஒட்டோ லோவி, நோபல் பரிசு பெற்ற செருமானிய-அமெரிக்க மருத்துவர் (பி. 1873)
1972 – ராஜாஜி, சென்னை மாகாண முதல்வர், அரசியல்வாதி, எழுத்தாளர் (பி. 1978)
1977 – சார்லி சாப்ளின், ஆங்கிலேய நடிகர் (பி. 1889)
1982 – தேவன் யாழ்ப்பாணம், ஈழத்து எழுத்தாளர், பேச்சாளர் (பி. 1924)
1994 – ஜெயில் சிங், 7வது இந்தியக் குடியரசுத் தலைவர் (பி. 1916)
2004 – நிரூபன் சக்கரபோர்த்தி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1905)
2005 – யோசப் பரராஜசிங்கம், இலங்கைத் தமிழ் அரசியல்வாதி (பி. 1934)
2006 – ஜேம்ஸ் ப்ரௌன், அமெரிக்கப் பாடகர் (பி. 1933)
2006 – தமிழோவியன், இலங்கை மலையக இலக்கியவாதி, கவிஞர்
2016 – வேரா உரூபின், அமெரிக்க வானியலாளர் (பி. 1928)
2018 – நரேந்திரநாத் சக்ரவர்த்தி, வங்காள மொழிக் கவிஞர் (பி. 1924)
2018 – நான்சி கிரேசு உரோமன், அமெரிக்க வானியலாளர் (பி. 1925)
2019 – சிறீகாந்தலட்சுமி அருளானந்தம், ஈழத்து நூலகர், எழுத்தாளர் (பி. 1961)

சிறப்பு நாள்

கிறித்துமசு நாள்
குழந்தைகள் நாள் (கமரூன், மத்திய ஆப்பிரிக்கக் குடியரசு, சாட், எக்குவடோரியல் கினி, காங்கோ மக்களாட்சிக் குடியரசு, காபோன், கொங்கோ குடியரசு)
நல்லாட்சி நாள் (இந்தியா)

165 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.