வரலாற்றில் இன்று – 31.12.2024
வரலாற்றில் இன்று – 31.12.2024

டிசெம்பர் 31 (December 31) கிரிகோரியன் ஆண்டின் 365 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 366 ஆம் நாள். இது ஆண்டின் இறுதி நாள் ஆகும்.
பொருளடக்கம்

நிகழ்வுகள்

535 – பைசாந்திய இராணுவத் தளபதி பெலிசாரியசு சிசிலி மீதான முற்றுகையை வெற்றிகரமாக முடித்தான்.
1225 – வியட்நாமின் 216 ஆண்டு கால லீ வம்ச அரசு முடிவுக்கு வந்து, டிரான் வம்சம் ஆட்சியைப் பிடித்தது.
1600 – பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனி ஆரம்பிக்கப்பட்டது.
1687 – நன்னம்பிக்கை முனையை அடைவதற்காக ஹியூகெனாட் எனப்படும் புரட்டஸ்தாந்தர்களின் முதற் தொகுதியினர் பிரான்சை விட்டுப் புறப்பட்டனர்.
1695 – இங்கிலாந்தில் பலகணி வரி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து பலர் தமது பலகணிகளை செங்கல் கொண்டு மூட ஆரம்பித்தார்கள்.
1775 – அமெரிக்கப் புரட்சிப் போர்: கியூபெக் சமரில் பிரித்தானியப் படைகள் அமெரிக்க விடுதலைப் படையின் தாக்குதலை முறியடித்தன.
1847 – ஆறுமுக நாவலர் தனது முதலாவது பிரசங்கத்தை வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோவிலில் ஆரம்பித்தார்.
1857 – விக்டோரியா மகாராணி கனடாவின் தலைநகராக ஒட்டாவாவைத் தேர்ந்தெடுத்தார்.
1862 – அமெரிக்க உள்நாட்டுப் போர்: மேற்கு வேர்ஜீனியாவை கூட்டணியில் இணைப்பதற்கான சட்டமூலத்தில் ஆபிரகாம் லிங்கன் கையெழுத்திட்டதில் வேர்ஜீனியா இரண்டாகப் பிரிந்தது.
1879 – வெள்ளொளிர்வு விளக்கு முதற்தடவையாக தொமஸ் எடிசனால் காட்சிப்படுத்தப்பட்டது.
1881 – இலங்கை முழுவதும் நிலநடுக்கம் உணரப்பட்டது.[1]
1923 – லண்டனின் பிக் பென் மணிக்கூண்டின் மணியொலி மணிக்கொரு தடவை பிபிசியில் ஒலிபரப்பு செய்ய ஆரம்பிக்கப்பட்டது.
1944 – இரண்டாம் உலகப் போர்: அங்கேரி நாட்சி செருமனி மீது போரை அறிவித்தது.
1944 – இரண்டாம் உலகப் போர்: மேற்குப் போர்முனையின் கடைசிப் போர் நார்ட்வின்ட் நடவடிக்கை ஆரம்பமானது.
1946 – அமெரிக்க அரசுத்தலைவர் ஹரி ட்ரூமன் இரண்டாம் உலகப் போரில் ஐக்கிய அமெரிக்காவின் பங்கு முடிவுக்கு வந்ததாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.
1963 – மத்திய ஆப்பிரிக்கக் கூட்டமைப்பு அதிகாரபூர்வமாகக் கலைந்தது. சாம்பியா, மலாவி, ரொடீசியா என மூன்று நாடுகள் உருவாகின.
1965 – மத்திய ஆப்பிரிக்கக் குடியரசில் இராணுவப் புரட்சி இடம்பெற்றது.
1968 – உலகின் முதலாவது சூப்பர்சோனிக் பயணிகள் விமானம் துப்போலெவ் டி.யு-144 தனது முதலாவது பறப்பை மேற்கொண்டது.
1981 – கானாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அரசுத்தலைவர் இல்லா லிமான் பதவியிலிருந்து அகற்றப்பட்டார்.
1983 – நைஜீரியாவில் இராணுவத் தளபதி மேஜர் முகம்மது புகாரி தலைமையில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து இரண்டாவது நைஜீரியக் குடியரசு கலைந்தது.
1984 – ராஜீவ் காந்தி இந்தியப் பிரதமரானார்.
1986 – புவேர்ட்டோ ரிக்கோவில் சான் வான் நகரில் உணவுசாலையை அதன் மூன்று ஊழியர்கள் தீ வைத்ததில், 97 பேர் உயிரிழந்தனர், 140 பேர் காயமடைந்தனர்.
1987 – ரொபேர்ட் முகாபே சிம்பாப்வேயின் அரசுத்தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1991 – சோவியத் ஒன்றியம் அதிகாரபூர்வமாகக் கலைக்கப்பட்டு ஐந்து நாட்களுக்குள் அனைத்து அரசு நிறுவனங்களும் செயலிழந்தன.
1992 – செக்கோசிலோவாக்கியா கலைக்கப்பட்டு செக் குடியரசு, சிலோவாக்கியா என இரு நாடுகளாகப் பிரிந்தது.
1994 – முதலாம் செச்சினியப் போர்: உருசிய இராணுவம் குரோசுனி மீது தாக்குதலை ஆரம்பித்தது.
1994 – பீனிக்சு தீவுகள், மற்றும் லைன் தீவுகளில் நேரமாற்றம் நடைமுறைப்படுத்தப்பட்டதை அடுத்து, கிரிபட்டியில் இந்நாள் முற்றாக விலக்கப்பட்டது.
1999 – 20-ஆம் நூற்றாண்டு, 2-ஆம் ஆயிரமாண்டு ஆகியவற்றின் கடைசி நாள்.
1999 – உருசியாவின் முதலாவது அரசுத்தலைவர் போரிஸ் யெல்ட்சின் பதவி விலகினார். பிரதமர் விளாதிமிர் பூட்டின் அரசுத்தலைவரானார்.
1999 – 1977 ஆம் ஆண்டில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்திற்கு அமைய, ஐக்கிய அமெரிக்கா பனாமா கால்வாயின் அதிகாரத்தை பனாமாவிடம் ஒப்படைத்தது.
1999 – இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் 814 ஐக் கடத்திய ஐந்து கடத்தல்காரர்கள் தாம் விடுவிக்கக் கோரிய இரண்டு இசுலாமிய மதகுருமார்கள் விடுவிக்கப்பட்டதை அடுத்து 190 பணயக்கைதிகளையும் விடுவித்துவிட்டு விமானத்தைக் கைவிட்டு வெளியேறினர்.
2004 – உலகின் அப்போதைய மிக உயரமான வானளாவியான தாய்வானின் 509 மீட்டர் உயர தாய்ப்பே 101 அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது.
2006 – ஐக்கிய அமெரிக்காவிடம் இரண்டாம் உலகப் போரின் போது பெற்ற கடன்களை ஐக்கிய இராச்சியம் முழுவதுமாக கட்டி முடித்தது.
2009 – நீல நிலவும் நிலவு மறைப்பும் நிகழ்ந்தன.
2011 – நாசா இரண்டு கிரெயில் செயற்கைக்கோள்களின் முதலாவதை நிலாவின் சுற்றுவட்டத்துள் செலுத்தியது.
2014 – சாங்காயில் இடம்பெற்ற புத்தாண்டுக் கொண்டாட்ட நெரிசலில் 36 பேர் உயிரிழந்தனர், 49 பேர் காயமடைந்தனர்.

பிறப்புகள்

1491 – இழ்சாக் கார்ட்டியே, பிரான்சிய கடற்படை அதிகாரி, நாடுகாண் பயணி (இ. 1557)
1514 – ஆண்ட்ரியசு வெசாலியசு, பெல்ஜிய உடற்கூற்றியலாளர், மருத்துவர் (இ. 1564)
1738 – காரன்வாலிஸ், பிரித்தானிய இந்தியாவின் 3வது தலைமை ஆளுநர் (இ. 1805)
1815 – ஜார்ஜ் கார்டன் மீடு, அமெரிக்க இராணுவ அதிகாரி, பொறியியலாளர் (இ. 1872)
1864 – இராபர்ட் கிராண்ட் ஐத்கென், அமெரிக்க வானியலாளர் (இ. 1951)
1869 – ஆன்றி மட்டீசு, பிரான்சிய ஓவியர், சிற்பி (இ. 1954)
1878 – எலிசபெத் ஆர்டன், கனடிய தொழிலதிபர் (இ. 1966)
1905 – எலன் தோடுசன் பிரின்சு, அமெரிக்க வான்யலாளர் (இ. 2002)
1910 – டி. எஸ். துரைராஜ், தமிழக நாடக, திரைப்பட நடிகர் (இ. 1986)
1929 – ச. வே. சுப்பிரமணியன், தமிழறிஞர் (இ. 2017)
1935 – சல்மான், சவூதி அரேபிய மன்னர்
1943 – ஜான் டென்வர், அமெரிக்கப் பாடகர், நடிகர் (இ. 1997)
1943 – பென் கிங்ஸ்லி, ஆங்கிலேய நடிகர்
1947 – நாஞ்சில் நாடன், தமிழக எழுத்தாளர்
1989 – பிரியா பவானி சங்கர், இந்தியத் திரைப்பட நடிகை, தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளர்

இறப்புகள்

335 – முதலாம் சில்வெஸ்தர் (திருத்தந்தை)
1691 – இராபர்ட் வில்லியம் பாயில், அயர்லாந்து வேதியியலாளர், இயற்பியலாளர் (பி. 1627)
1719 – ஜான் பிளேம்சுடீடு, ஆங்கிலேய வானியலாளர் (பி. 1646)
1876 – கத்தரீன் லபோரே, பிறரன்பின் புதல்வியர் துறவற சபையின் அருட்சகோதரி, பிரான்சியப் புனிதர் (பி. 1806)
1913 – சேத் கார்லோ சாண்டிலர், அமெரிக்க வானியலாளர் (பி. 1846)
1940 – விஸ்வநாத தாஸ், விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், நாடக கலைஞர் (பி. 1886)
1973 – அலெக்சாந்தர் விசோத்சுகி, உருசிய-அமெரிக்க வானியலாளர் (பி. 1888)
1984 – கே. ஆர். ராமநாதன், இந்திய இயற்பியலாளர் (பி. 1893)
1986 – ராஜ் நாராயணன், இந்திய இடதுசாரி அரசியல்வாதி, விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (பி. 1917)
1994 – கரவை கந்தசாமி, ஈழத்து இடதுசாரி அரசியல்வாதி, தொழிற்சங்கவாதி
2001 – தொ. மு. சிதம்பர ரகுநாதன், தமிழக எழுத்தாளர் (பி. 1923)
2011 – இராணி ஜெத்மலானி, இந்திய மனித உரிமை செயற்பாட்டாளர், வழக்கறிஞர்

சிறப்பு நாள்

152 0

Leave a comment

தொடர்புடைய செய்திகள்

Advertisement


Contact Us

361, Kasthuriyar Road, Jaffna.

0771209996

admin@uthayan.com

Uthayan is a Sri Lankan daily newspaper that caters to the Tamil-speaking population. It is published by the esteemed New Uthayan Publication (Private) Limited, which is a constituent of the illustrious Uthayan Group of Newspapers. The newspaper was established in 1985 and operates from the city of Jaffna. It has a sister newspaper, Sudar Oli, which is headquartered in Colombo. Notably, Uthayan was the sole newspaper that continued its operations in Jaffna during the civil war. Unfortunately, the newspaper has faced numerous challenges, including repeated attacks, targeted killings of its personnel by paramilitary groups, and persistent threats.

Copyright © 2023 UTHAYAN All rights reserved.