வவுனியா மாவட்டத்தில் இவ்வருட பெரும்போகத்தில் 25ஆயிரத்து231.29 ஹெக்டேயர் நெற்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட செயலாளர் பி.ஏ.சரத்சந்ர தெரிவித்துள்ளார்.
வவுனியா மாவட்டத்தில் உரிய நேரத்தில் மழை கிடைக்கப்பெற்றதால், நெல் விதைப்பு நடவடிக்கைகள் ஆரம்பமாகியுள்ளதாகவும் வவுனியா, வவுனியா தெற்கு, நெடுங்கேணி, செட்டிக்குளம் ஆகிய நான்கு பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் நெல் செய்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் ஹெக்டேயர் ஒன்றிற்கு இருபத்தைந்தாயிரம் ரூபா உர மானியம் வழங்கியதாகவும், இதற்கு விவசாயிகள் நன்றி தெரிவித்திருந்ததாகவும் அவர் தெரிவித்தார். (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.