வவுனியா நகரப்பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். திருகோணமலை பகுதியில் இருந்து வவுனியா நோக்கி பயணித்த பார ஊர்தி ஒன்றுடன் அதே பகுதியில் இருந்து பயணித்த முதியவர் ஒருவர் வாகனத்தின் மோதுண்ட நிலையில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்தில் நடுக்குளம் பகுதியைச் சேர்ந்த 71 வயதுடைய கும்புகே பண்டார முதியவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த முதியவரின் சடலம் வவுனியா மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இச்சம்பவத்துடன் தொடர்புடைய பார ஊர்தியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ச)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.