வவுனியா பாவற்குளத்தில் நேற்று மாலை நடந்த விபத்தில் 7 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அப்துல் மஜித் உமர் (வயது-7) என்ற சிறுவனே உயிரிழந்தவராவார்.
சைக்கிளில் பயணித்த சிறுவர்களும், பஸ்ஸூம் மோதியதில் இந்த விபத்து நடந்துள்ளது. பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் பஸ்ஸை நிறுத்திய சாரதி, மீண்டும் பஸ்ஸை எடுத்தபோது சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்கள் வீதியின் குறுக்கே சென்றபோது பஸ்ஸில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.