மாத்தளை, லக்கல எலவாகந்த பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை(14) மாலை பேருந்து ஒன்றும் வான் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
சுற்றுலா சென்ற பேருந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளாகியுள்ளது.
வில்கமுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தம்புள்ளை – மஹியங்கனை வீதியின் எலவாகந்த பிரதேசத்தில் தம்புள்ளையிலிருந்து மஹியங்கனை நோக்கி பயணித்த பேருந்து ஒன்று எதிர் திசையில் இருந்து வந்த வானுடன் மோதி அருகில் இருந்த மண்மேட்டுடன் மோதி கவிழ்ந்தது.
பேருந்தில் பயணித்த 37 பேரும் வானில் இருந்த 5 பேரும் படுகாயமடைந்து வில்கமுவ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில் பேருந்தில் இருந்த இருவர் மற்றும் வானில் இருந்த ஒருவரும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.