(புதியவன்)
இந்தியாவின் இண்டிகோ வானூர்திக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இன்று காலை டெல்லியிலிருந்து வாரணாசி செல்வதுக்காக இண்டிகோ வானூர்தியில் பயணிகள் ஏற்றப்பட்டு புறப்பட தயார் நிலையில் இருந்த போதே இந்த வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து வானூர்தியில் இருந்த பயணிகள் அனைவரும் அவசர வழி ஊடாக உடனடியாக வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
சற்று நேரத்தில் வானூர்தி புறப்பட இருந்த நிலையில் இண்டிகோ நிறுவனத்துக்கு வானூர்தியில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது என மிரட்டல் வெளியானது.
இதனையடுத்து வானூர்தி தள அதிகாரிகள் பொலிஸார் மற்றும் தீயணைப்புத் துறையினர் வானூர்தியை வானூர்தித் தளத்தின் ஒதுக்குப்புறமாக கொண்டு சென்றதுடன் வானூர்தியில் இருந்த பயணிகள் அவசர வழியூடாக வெளியேற்றப்பட்டனர்.
வானூர்தி முழுமையாக வெடிகுண்டு நிபுணர்களால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருவதுடன். இச் சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.(ஞ)
361, Kasthuriyar Road, Jaffna.
0771209996
admin@uthayan.com
Copyright © 2023 UTHAYAN All rights reserved.